63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -2 திருநீலகண்ட நாயனார் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் அறிமுகம் 🙏
பகுதி -2
2) திருநீலகண்ட நாயனார்
சிதம்பரத்தில் அவதரித்த திருநீலகண்ட நாயனார் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.. திருமண வயது வரும்போது தனக்கான ஒரு பெண்ணை மணந்து கொண்டார்...
ஒரு முறை விலைமாதரிடம் சென்றது அறிந்து அவரது மனைவி இறைவன் மேல் ஆணையிட்டு ஒருவரை ஒருவர் தொடாமல் வாழ்ந்தனர். இப்படி அவர்கள் பல வருடங்கள் ஒருவரையொருவர் தொடாமல் வாழ்ந்தனர்.. இருவரும் முதுமையை நோக்கி செல்லும் போது ....
Shiva Vishnu Tv
அவர்களை ஒன்று சேர்க்க நினைத்த சிவபெருமான் சிவனடியாராக வந்து திருவோடு ஒன்றை அவர்களிடம் கொடுத்து யாம் பின்னர் வந்து பெற்றுக் கொள்வதாக சொல்லிச் சென்றார்.
சிலகாலம் கழித்து சிவபெருமான் திருநீலகண்டரை சந்தித்து தான் கொடுத்துவிட்டு சென்ற திருவோடை திருப்பி கொடுங்கள் என்று கேட்கிறார்...
உடனடியாக திருநீலகண்டர் திருவோடை எடுத்து வர உள்ளே சென்று பார்க்கிறார். அங்கே திருவோடு இல்லை... இந்த செய்தியை எப்படி சிவனடியார் விடம் சொல்வது என்று தெரியாமல் தயங்கியபடி சொல்ல....
Shiva Vishnu Tv
சிவனடியார் கோபம் கொள்கிறார்..
திருநீலகண்டர் தோய்ந்த குரலில் " ஐயா உங்களுக்கு நான் புதிதாக திருவோடு ஒன்றை வாங்கி கொடுக்கிறேன்... அதே திருவோடு எம்மால் தர இயலாது" என்று கூற
அதற்கு சிவனடியார்" நான் உம்மிடம் கொடுத்த திருவோடு தவிர தங்கத் திருவோடு கொடுத்தாலும் வேண்டாம் என்று கூற...
ஐயா நான் சத்தியம் செய்கிறேன் உங்கள் திருவோடு மாயமாய் மறைந்து விட்டது... யாம் எந்த தவறும் செய்யவில்லை... என திருநீலகண்டர் கூற...shiva Vishnu Tv
"அப்படியென்றால் உம் மகன் மீது சத்தியம் செய் " என்று சிவனடியார் கூற...
அதற்கு திருநீலகண்டர்" ஐயா எமக்கு குழந்தைகள் இல்லை " என்க...
"அப்படியென்றால் உம் மனைவியும் நீயும் ஒருவரையொருவர் கைபிடித்து குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் செய் அப்போது யாம் உம்மை நம்புகிறோம்" என்று சிவனடியார் கூற...
"ஐயா எமக்கும் எமது மனைவிக்கும் எவ்விதமான தொடுதல் இல்லாத வாழ்க்கை தான் வாழ்கிறோம்... அப்படியிருக்க எப்படி இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்க முடியும்?" என்று அப்பாவியாக கேட்க்க....
கோபமான சிவனடியார் "இனி உம்மிடம் பேசி பயனில்லை" என்றபடி அவரை தில்லை அந்தணர்கள் சபைக்கு அழைத்துச் சென்று பஞ்சாயத்தை கூட்டி சிவனடியார் தன் வழக்கை பதிவு செய்கிறார்... Shiva Vishnu Tv
விசாரணை செய்த தில்லை அந்தணர்கள் திருநீலகண்டரை பார்த்து "ஐயா நீங்கள் சிவனடியார் கூறியது போல குளத்தில் உமது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு மூழ்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்குகின்றனர்...
வேறுவழியின்றி தம் மனைவியை அழைத்துக்கொண்டு வரும் திருநீலகண்டர் ஒரு மூங்கில் கம்பை ( மூங்கில் தடி ) ஒருபுறம் தாமும் மறுபுறம் தமது மனைவியிடமும் கொடுத்து குளத்தில் மூழ்க போகும் போது இடைமறித்து சிவனடியார் " தம்பதிகள் ஒருவரையொருவர் கைகளை பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்க வேண்டும்" என்று கூற...
திருநீலகண்டர் வேறுவழியின்றி தம் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கி எழும்போது முதுமை மாறி இளமைக் கோலத்துடன் இருக்கின்றனர்.... குளக்கரையில் இருக்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சி.... Shiva Vishnu Tv
அங்கிருந்த சிவனடியார் மாயமாய் மறைந்து போக... அனைவரும் சிவனடியார் எங்கே என்று சுற்றும்முற்றும் பார்க்க... அந்த நேரத்தில்....
ரிஷப வாகனத்தில் தேவியுடன் சிவபெருமான் காட்சி அருளினார் 🙏
#63நாயன்மார்கள் #shivavishnutv #திருநீலகண்டர்நாயனார் #shiva_vishnu_tv
Comments
Post a Comment