63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -3 இயற்பகை நாயனார் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் அறிமுகம்
பகுதி -3
3) இயற்பகை நாயனார்..
63 நாயன்மார்களில் இந்த நாயன்மார் செய்த செயல் என்பது அவர் கடவுள் மேல் வைத்துள்ள அளப்பரிய பற்றையும், பக்தியையும் காட்டும்.
காவிரிப்பூம்பட்டினத்தில் அவதரித்த இயற்பகை நாயனார் வியாபாரியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். செல்வம் குவித்து பெரும் செல்வந்தராக விளங்கிய இவர் சிவனடியார்கள் என்று யாராவது வந்து எந்த பொருள் கேட்டாலும் கொடுக்கும் வல்லமை கொண்டவராக விளங்கினார்.
Shiva Vishnu Tv
இப்படி அழகாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கை சிவபெருமானின் திரு விளையாட்டால் தலைகீழாக மாறியது.
ஒரு நாள் சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு இயற்பகை நாயனார் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் "இயற்பகை நாயனாரே... தங்களைப் பற்றி பல செய்திகள் கேள்விப்பட்டேன் நீங்கள் அடியார்கள் வந்து கேட்டால் எந்த பொருளாக இருந்தாலும் கொடுத்து விடுவீர்கள் என்பதை கேட்டு மகிழ்ச்சியுற்றேன் ஆகவே தங்களிடம் ஒரு பொருள் கேட்கவே இங்கு வந்திருக்கிறேன் எந்த பொருள் கேட்டாலும் கொடுப்பாய் அல்லவா?" என்று சந்தேகமாக இயற்பகை நாயனாரிடம் சிவனடியார் கேட்க... Shiva Vishnu Tv
சற்றும் யோசிக்காத இயற்பகை நாயனார் "ஐயா என்னிடம் உள்ள அனைத்து பொருட்களும் ஈசனின் பொருட்களே ஆகையால் அந்தப் பொருட்கள் அனைத்தும் சிவனடியார்களுக்கும் சொந்தமே நீங்கள் தயங்காமல் உங்களுக்கு என்னிடம் உள்ள எந்த பொருள் வேண்டும் என்று கேளுங்கள் அதை யாம் கொடுத்து நீங்கள் பெற்றுக் கொண்டு செல்லலாம்" என்று சொல்ல..
இயற்பகை நாயனாரே எமக்கு உமது மனைவிதான் வேண்டும் உம்மால் கொடுக்க முடியுமா? என்று இயற்பகை நாயனாரிடம் சிவனடியார் கேட்க ...
சற்றும் யோசிக்காத இயற்பகை நாயனார் சிவனடியாரை வீட்டின் வெளியே நிற்க சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று தன் மனைவியை பார்த்து "இதுவரை என் மனைவியாக இருந்த உன்னை இன்று முதல் வெளியே இருக்கும் நபரிடம் நான் கொடுக்க போகிறேன் நீ அவருடன் செல்ல வேண்டும்" என்று கூற ... Shiva Vishnu Tv
இதை சற்றும் எதிர்பார்க்காத அவரின் மனைவி முதலில் கோபப்பட்டு, அழுது, புலம்பி பிறகு கணவன் சொல்லைத் தவிர நமக்கு எது முக்கியம் என்றபடி மனதில் நினைத்தவாறு அவரிடம் "தாங்கள் என்ன கூறுகிறீர்களோ அப்படியே நடந்து கொள்கிறேன்" என்று வெளியே வந்து அந்த சிவனடியார் உடன் செல்ல சம்மதிக்கிறாள்...
இப்பொழுது இயற்பகை நாயனார் தன் மனைவியை அந்த சிவனடியாரிடம் கொடுத்து "ஐயா நீங்கள் கேட்டதை கொடுத்து விட்டேன் இது போதுமா? அல்லது என்னிடம் இருந்து வேறு ஏதாவது உங்களுக்கு தேவையா? என்று பவ்யமாக கேட்க ...
அதற்கு சிவனடியார் "இப்பெண்ணை நான் அழைத்துச் செல்லும் பொழுது உம்முடைய சொந்தங்களும், இப்பெண்ணின் சொந்தங்களும் எம்மை நிச்சயம் தாக்க வருவார்கள் அவர்கள் எம்மை தாக்காமல் இப்பென்னையும், எம்மையும் இந்த ஊர் எல்லை தாண்டி விட்டு வர வேண்டும் அதாவது எங்களுக்கு காவலாக வந்து வழி அனுப்பி வைத்துவிட்டு நீ வரவேண்டும்" என்று கூறுகிறார் சிவனடியார் .. Shiva Vishnu Tv
சற்றும் சளைக்காத இயற்பகை நாயனார் உள்ளே சென்று ஒரு போர் வீரனுக்கு உரிய தோற்றத்திற்கு மாறி அவர்களுடன் பாதுகாப்பாக அதாவது இயற்பகை நாயனார் முன்னேவும் அவரை தொடர்ந்து சிவனடியார் அவரை தொடர்ந்து இயற்பகை நாயனாரின் மனைவியும் சென்று கொண்டிருக்கும் பொழுது சிவனடியார் கூறியபடி அவரின் உறவினர்கள் இயற்பகை நாயனாரிடம் வந்து "உனக்கு ஏதும் பைத்தியம் பிடித்து விட்டதா? ஏன் இப்படி செய்கிறாய்? யாராவது கட்டிய மனைவியை பரதேசி இடம் அனுப்பி வைப்பார்களா! என்று சண்டை போட...
இயற்பகை நாயனார் தன் சொந்தம் என்று கூட பார்க்காமல் தன் கைகளில் வைத்திருந்த கத்தியாலும் கேடயத்தாலும் தாக்கி பலரை கொன்று முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில் அனைவரும் இறந்து விடுகின்றனர். பிழைத்தால் போதும் என்று ஓடியவர்கள் சிலரே... இப்பொழுது ஊர் எல்லையை கடந்து வந்தாயிற்று...
இயற்பகை நாயனாரை பார்த்து சிவனடியார் "அப்பா போதும்பா இதன் பிறகு நீங்கள் திரும்பிப் பார்க்காமல் செல்லலாம் இப்பெண்ணை அழைத்து கொண்டு யாம் செல்கிறோம்" என்று கூற அதே போல் இயற்பகை நாயனார் திரும்பி பார்க்காமல் வேக வேகமாக தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார். Shiva Vishnu Tv
இயற்பகை நாயனார் சிறிது தூரம் தான் வந்திருப்பார் அதற்குள் "இயற்பகை நாயனாரே என்னை விட்டு செல்கிறீரே உமது உறவினர்கள் மீண்டும் வந்து என்னை தாக்குகிறார்கள்" என்று சிவனடியார் கத்தி, கதறி, கூப்பாடு போட ... உடனடியாக வாளை உருவிக்கொண்டு "உங்களைத் தாக்க வந்தவர்களை கொல்லாமல் விடமாட்டேன்" என்று வேக வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடி நின்று பார்க்கும்போது அங்கே தன் மனைவி மட்டும் தனியே நின்றிருப்பதை பார்த்து சிவனடியார் எங்கே என்பதைப் போல சுற்று முற்றும் பார்க்க அங்கே யாருமே இல்லை.!
சில வினாடிகளில் சிவபெருமான் கணவன் மனைவி இருவருக்கும் காட்சி கொடுத்து அவர்களுக்கு மோட்சமும் கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் இயற்பகை நாயனார் கையால் எவரெல்லாம் மாண்டனரோ அவர்களுக்கும் மோட்சம் கொடுத்து சிவலோகத்தில் அடைக்கலம் கொடுத்தார் என்பது ஒரு அற்புதமான புராண வரலாறு 🙏
Shiva Vishnu Tv 🙏
#63நாயன்மார்கள் #இயற்பகை_நாயனார் #shiva_vishnu_tv #இறைவழியில்_எம்_பயணம் #shivavishnutv
Comments
Post a Comment