63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -4 இளையான்குடி மாற நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -4

இளையான்குடி மாற நாயனார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாற நாயனார் பிறந்தார்..  உழவுத் தொழில் செய்து சீரும் சிறப்புடன் விளங்கிய மாற நாயனார் தினமும் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதை தம் வழக்கமாக கொண்டிருந்தார்.

சகல செல்வங்களும் இருப்பதால் தான் இந்த மாற நாயனார் சிவனடியார்களுக்கு வாறி வழங்குகிறார் என்று அந்த ஊரில் ஒரு பேச்சு வழக்கில் இருந்தது...‌

இதனை சோதிக்க சிவபெருமான் தம் திருவிளையாடல்களை ஆரம்பித்தார்... 

முதலில் மாற நாயனாரின் செல்வ செழிப்பை குறைத்தார் ‌.. 

அப்போதும்  மாற நாயனார் தன் சிவ தொண்டை நிறுத்தவில்லை... Shiva Vishnu Tv 

இறுதியாக சாப்பாட்டிற்கே கையேந்தும் நிலையில் ஒரு நாள் தன் நிலத்தில் விதை நெல்லை விதைத்துவிட்டு வந்தார்... அன்று ஒரு சிவனடியார் கூட அவர் கண்ணில் படவில்லை... மாற நாயனார் படுத்து உறங்கும் நேரத்தில் அதாவது நள்ளிரவில் சிவபெருமான் சிவனடியாராக வேடம் புனைந்து மாற நாயனாரின் வீட்டின் கதவை தட்டி உணவு கேட்க... 

செய்வதறியாது விழித்த மாற நாயனார் சிவனடியாரை திண்ணையில் உட்காரவைத்து... இதோ வருகிறேன் சாமி என்றவாறு... தன் விளைநிலம் சென்று தாம் விதைத்த விதை நெல் மணிகளை ஒவ்வொன்றாக எடுத்து தன் மனைவியிடம் கொடுக்க... அதை வாங்கிய அவர் தன் பங்கிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் உள்ள இலைகள், கீரைகள் போன்றவற்றை கொண்டு தன் வீட்டில் உள்ள கூரையின் மரத்தை எடுத்து அதை விறகாக பயன்படுத்தி உணவு தயாரித்து கொடுத்தார். 
Shiva Vishnu Tv 

நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சிவனடியாரை மாற நாயனார் எழுப்பி சாப்பிட அழைக்க... 

அடுத்த நொடி.... சிவபெருமான்  மாற நாயனார் மற்றும் அவரது மனைவிக்கு காட்சி கொடுத்தார் 🙏

#63நாயன்மார்கள் #shivavishnutv #shiva_vishnu_tv #இளையான்குடி_மாற_நாயனார் #இறைவழியில்_எம்_பயணம்

Shiva Vishnu Tv 🙏🙏🙏

Comments