63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் - பகுதி -5 மெய்ப்பொருள் நாயனார் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -5
5) மெய்ப்பொருள் நாயனார்
தன்னை கத்தியால் குத்திய ஒருவனை ... அவன் சிவனடியார் வேடத்தில் இருக்கும் ஒரேயொரு காரணத்தால்... அவனது உயிரை காப்பாற்றி ... தன் நாட்டை விட்டு பத்திரமாக அதே நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் உங்களால் வழியனுப்பி வைக்க முடியுமா? அப்படி செய்த மகான் தான் இந்த மெய்பொருள் நாயனார்!
மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவிலூர் எனும் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவார்... மற்ற மன்னர்கள் போலில்லாமல் இவர் எப்போதும் சிவ நெறியை தவறாது கடைபிடிக்கும் மன்னனாக விளங்கியதால் அந்த நாடே செல்வ செழிப்பு மட்டுமில்லாமல் அனைத்து விதத்திலும் சிறப்பான ஒரு நாடாக திகழ்ந்தது... Shiva Vishnu Tv
கோவில்களில் வேளை தவறாமல் பூஜைகள் நடைபெற்றது... மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்...
இப்படி அழகாக சென்றுகொண்டிருந்த இவர் வாழ்க்கை அண்டை நாட்டில் வாழ்ந்த முத்த நாதன் எனும் மன்னனுக்கு பெறும் எரிச்சலாக அமைந்தது... எப்படியாவது மெய்பொருளாரை வீழ்த்த வேண்டும் என்று பலமுறை போரிட்டு தோல்வியை தழுவினான்...
இறுதியாக மெய்பொருளாரை நேரடியாக வீழ்த்த முடியாது என்று புரிந்துகொண்டு நயவஞ்சக பாதையை தேர்வு செய்கிறான் முத்த நாதன்...
அதன்படி மெய்பொருளாருக்கு மிகவும் பிடித்த சிவனடியார் வேடமிட்டு திருக்கோவிலூர் நோக்கி செல்கிறான்.. அங்கே பல கட்டுப்பாடுகளையும் தன் சிவனடியார் வேடத்தால் எளிதாக கடந்து இறுதியில் மன்னன் உறங்கும் பள்ளியறை அருகேயும் சென்று அங்குள்ள காவலரிடம் யாம் மன்னரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று கூற... மன்னரை பார்க்க அனுமதிக்கப்படுகின்றார் ... Shiva Vishnu Tv
சிவனடியாரை கண்டு மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த மெய்பொருளார் அவனை வரவேற்று இருக்கையில் அமரச் செய்து.. அவனது கால்களின் அருகில் பவ்யமாக கீழே உட்கார்ந்து... ஆகமம் கூறுங்கள் அடியாரே.... என்று சொல்ல...
உடனடியாக தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெய்பொருளாரின் முதுகில் குத்த ... இதை சற்றும் எதிர்பார்க்காத மெய் பொருளார் வலியில் துடிக்க.... மன்னன் அலறும் சத்தம் கேட்டு அருகில் உள்ள காவலன் வேகமாக உள்ளே வந்து நடந்தவற்றை பார்த்து பதறிப்போய் தன் உடைவாளை எடுத்து முத்த நாதனை கொல்ல முயல...
" வேண்டாம்... இந்த சிவனடியாரை கொல்ல வேண்டாம்... காவலன் அரசனின் ஆணைப்படி அமைதியாக நின்று... அடியேன் இப்போது என்ன செய்ய வேண்டும் மன்னா? என்று கேட்க... அதற்கு மெய்பொருள் நாயனார்" இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டு வா" என்று கட்டளையிட... அந்த ஆணையை ஏற்று முத்த நாதனை அழைத்துக்கொண்டு செல்கிறான்... Shiva Vishnu Tv
எப்படியோ இந்த செய்தியை கேள்விப்பட்டு மக்கள் திரண்டு முத்த நாதனை தாக்க முயற்சிக்கும் போது... "அரசரின் ஆணை... அரசரின் ஆணை... என்றவாறு கூறியபடியே முத்த நாதனை நாட்டின் எல்லையில் விட்டு திரும்பினான் காவலன்....
மெய்ப்பொருள் நாயனார் செய்த இச்செயலை பார்த்து கொண்டிருந்த சிவபெருமான் மெய்பொருளாருக்கு காட்சியளித்தார்.... தமது சிவலோகத்திலும் தமது இதயத்திலும் மெய்பொருள் நாயனாருக்கு இடம் கொடுத்தார்🙏
Shiva Vishnu Tv 🙏
#63நாயன்மார்கள் #shivavishnutv #மெய்ப்பொருள்_நாயனார் #shiva_vishnu_tv #இறைவழியில்_எம்_பயணம்
Comments
Post a Comment