63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -6 விறன்மிண்ட நாயனார் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -6
விறன்மிண்ட நாயனார்
சிவபெருமானை சைவத்தில் இருந்தே ஒருவர் ஒதுக்கி வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்து காட்டியவர் தான் இந்த விறன்மிண்ட நாயனார் 🙏
......................................................................................
விவசாயம் தொழில் செய்து வாழ்க்கை நடத்திவந்தவர் தான் இந்த விறன்மிண்ட நாயனார்... வேலை முடித்த பிறகு அருகில் உள்ள சிவாலயங்கள் சென்று அங்குள்ள அடியார்களை வணங்குவதும் அவர்களின் புகழை மற்றவர்களுக்கு சொல்லி அதன் மூலம் ஆனந்தம் அடைந்தவர் இவர்... Shiva Vishnu Tv
ஒரு நாள் திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் உடன் அடியார்களின் பெருமைகளை பேசிக்கொண்டிருந்தார் அப்போது அங்கே சிவபெருமானை வணங்குவதற்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் விறன்மிண்ட நாயனார் லயித்து பேசிக்கொண்டிருப்பதையும் அந்த பேச்சை ரசித்து சில அடியார்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்... தாம் அங்கே சென்றால் அவர்களின் பேச்சு தடைபடும் என்று நினைத்து அவர்களிடம் செல்லாமல்... சற்று ஒதுங்கி சிவபெருமானை தரிசிக்க சென்றுவிட்டார்...
இவற்றை கவனித்த விறன்மிண்டர் ... சுந்தரமூர்த்தி நாயனார் வேண்டுமென்றே அடியார்களை வணங்காது கடந்து சென்று விட்டார் என்று நினைத்து அவர்மேல் கோபம் கொண்டார்...
அடியார்களை வணங்காது சென்ற சுந்தரமூர்த்தி சைவமே கிடையாது அவரை சைவத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன் அவர் வழிபட சென்ற திருவாரூர் தியாகராஜரையும் சைவத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன் என்று கோபத்துடன் கூற.... Shiva Vishnu Tv
விறன்மிண்டரது அடியார் பக்தியை புரிந்துகொண்ட சுந்தரமூர்த்தி நாயனார்... சிவபெருமானிடம் முறையிட அதற்கு சிவபெருமான் " நாம் அடியாருடன் உள்ளோம்:; அடியாரைப்பாடு" என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் " தில்லைவாழந்தணர்" என அடியெடுத்தும் கொடுத்தாராம்...
சுந்தரமூர்த்தி நாயனார் உலகமெல்லாம் உயர்வதற்கு காரணமானதும், திருத்தொண்டத் தொகை பாடுவதற்கும் காரணமாக அமைந்தார் விறன்மிண்டர்...
இறுதியில்... சிவபெருமான் காட்சியளித்த பிறகு... இப்போதும் கைலாயத்தில் பூதகணங்களுக்கு தலைவராக விறன்மிண்டர் இருக்கிறார் 🙏
Shiva Vishnu Tv
#63நாயன்மார்கள் #shiva_vishnu_tv #விறனமிண்டநாயனார் #shivavishnutv #இறைவழியில்_எம்_பயணம்
Comments
Post a Comment