63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -24 பேயர் என்கிற காரைக்கால் அம்மையார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -24
பேயர் என்கிற காரைக்கால் அம்மையார் 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவதரித்தவர். காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் இவருடைய கணவர் பரமதத்தனை தேடி வந்த நண்பர் இரு மாங்கனிகளை கொடுக்க அதில் ஒன்றை புனிதவதியார் சிவனடியாருக்கு கொடுத்து உணவளித்தார்.

பரமதத்தனுக்கு மீதமுள்ள ஒரு மாங்கனியை வைத்து உணவு பரிமாற அவர் மற்றொரு கனியையும் கேட்டார்.

 இறைவனை வேண்டி ஒரு மாங்கனியை பெற்றார். அதை உண்ட பரமதத்தன் சுவை மிகுதியால் நடந்ததைக் கேட்டு மனைவியின் தெய்வீக தன்மையை உணர்ந்து வேற்றூர் சென்று மறுமணம் செய்து வாழ...

 அதை அறிந்து புனிதவதியார் சென்றபோது தன் புதிய மனைவியுடன் காலில் விழுந்து  வணங்க, அம்மையார் உலக வாழ்வில் வெறுத்து ஈசனிடம் பேய் உருவம் வேண்டி தலையாலேயே நடந்து திருவாலங்காட்டிற்கு செல்ல அங்கே சிவபெருமான் நடனம் புரியும் காட்சி அளித்தார்.

Comments