63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -32 மூர்க்க நாயனார் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி - 32
மூர்க்க நாயனார்
திருவேற்காடு எனும் ஊரில் அவதரித்த மூர்க்கர் சிவனடியார்களுக்கு உணவு படைத்து அவர் முன்னே சிவனடியார்களை உண்ணச் செய்து அதன் பின் தான் உண்ணுவதை விரதமாக போற்றி வந்தார்.
அடியார்களுக்கு தொடர்ந்து இப்பணியினை செய்து வந்ததினால் எல்லா பொருட்களும் தீர்ந்துவிட பொருள் ஈட்ட மனமில்லாமல் மூர்க்கர் சூதாட்டத்தினால் பணம் பெறலாம் என்றெண்ணி கும்பகோணம் சென்று பல இடங்களில் சூதாடும் போது முதல் ஆட்டத்தில் தோல்வி பெற்று பின்வரும் எல்லா ஆட்டத்திலும் தானே வெற்றி பெறுவார்.
இதை மறுத்து பேசுபவர்களை தன் உடைவாளால் குத்துவார் சூதாடி கிடைக்கும் பணத்தை தன் கையால் தொடாது சமைப்பவர்களால் எடுத்து சிவனடியாருக்கு உணவளித்து கடைப்பந்தியில் தான் உட்கார்ந்து சாப்பிடுவார் இதை தன் வாழ்நாள் முழுவதும் செய்து மூர்க்க நாயனராக போற்றப்பட்டார்.
Comments
Post a Comment