63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -38 கணநாத நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -38
கணநாத நாயனார் 

சீர்காழியில் அவதரித்த கணநாதர் சீர்காழி தோனியப்பருக்கு நாள்தோறும் திருப்பணிகளை செய்து வந்தார்.

 தன்னை நாடிவரும் அடியாருக்கு உழவாரப்பணி பயலச் செய்வார் நந்தவனப் பணி செய்வோர், மலர் பறிப்போர், மாலை தொடுப்போர், திருமஞ்சன நீரினை கொண்டு வருவோர், இரவும் பகலும் திருவலகும், திருமெழுகும் இடுவோர், திரு விளக்கு ஏற்றுவோர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்று பல திருப்பணிகளை செய்வோரை திரு தொண்டராக்கி அவர்களுக்கு எந்த குறைபாடு ஏற்படாமல் பாதுகாப்பு தருவார்.

 தோனியப்பரின் இறையருள் பெற மக்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இல்லறத்தில் மனைவியோடு இருந்து கொண்டே திருத்தொண்டு புரிந்து வந்தார் இதன் பயனாக திருக்கையிலேயே அடைந்து பெருஞ்சிவகனங்களுக்கு நாதராகி கணநாத நாயனார் என போற்றப்பட்டார்.

Comments