63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -58 பத்தராய்ப் பணிவார்கள் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -58
பத்தரஆய்ப் பணிவார்கள் 

சிவபெருமான் திருவடிக்கு அன்பு பூண்டு பக்தியுடன் தவத்தோடு பணிபவர்கள் பத்தராய் பணிவார் ஆவார்.

எவரேனும் அர்ச்சனை செய்வதை கண்டால் இனிது மகிழ்ந்து வணங்கிய அவர்களது அருள் நோக்கத்தால் பலரும் காணும்படி பயன்பெறுவார்கள். சிவபெருமானையும் சிவனடியார்களையும் தெவிட்டாத பெரு விருப்பத்தினால் மகிழ்ச்சி பொங்க பூசிப்பார்கள்.

வத்தராய் விளங்குவோர் தான் செய்யும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் "இறைவன் திருவடிக்கே சேரும் தகுதியுடையனவாகுக" என்று அன்பினோடு சிவப்பணிகளை செய்வார்கள்.

சிவனடியார்களை தொழுதல், சிவாச்சனை புரிதல், சிவபெருமானுக்கு நியமன தொண்டுகள் புரிதல், சிவசரிதம் கேட்டல், சிவபெருமானை தியானித்தல், எப்போதும் சிவனடியே சிந்தித்தல் ஆகிய செந்நெறியில் வாழ்வோர் பத்தராய் பணிவார் ஆவார்கள் 🙏🙏🙏

Comments