63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 59 பரமனையே பாடுவார் அடியார்கள் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 59
பரமனையே பாடுவார் அடியார்கள் 

முப்புறங்களை எரித்தவரும் பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரும் இணையற்ற பரம்பொருளாய்  விளங்குபவரும் உலகமனைத்தையும் தமது மாய சக்தியால் உருவாக்கியவரும் கரணங்களால் காணப்படாதவராயினும் உலகில் நிறைந்து காட்டுபவருமாகிய சிவபெருமானையே பாடுவார்கள் "பரமனையே பாடுவார்" அவர்.

தமிழ் மொழி, வடமொழி, பிரதேச மொழி இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கற்று பிரம்மனும், விஷ்ணுவும் காணப் பெறாத சிவபெருமானையே மெய்ப்பொருளாக கொண்டு இயல் இசை பாடல்களை மெய்யுணர்வுடன்  மனம் உருகி பாடுவார்கள். இடைவிடாது பரமனையே சிந்திப்பார்கள் இவர்களை "பரமனையே பாடுவார்" எனும் மெய்யடியார் அவர் 🙏🙏🙏

Comments