63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 60 சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -60
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள்
உயர் பற்று அற்று சிவனையே சிந்திப்பவர் மூலாதாரத்தில் இருந்து குண்டலினியை ஆரூதாரம் வழியே மேலே ஏற்றுவார்கள்.
பிரம்மேந்திரத்தின் மேல் 1008 இதழ் தாமரை மீது நடிக்கும் தெய்வத்திரு நடனம் கண்டு ஆனந்த அமுதுண்டு களிப்பார்கள்.
பிரம்மன, விஷ்ணு, உருத்திரன, மகேசன், சதாசிவம் என்ற காரண கடவுளர் ஐவருக்கும் முறையே உரிய இருதயம், கண்டம், உள்நாக்கு, புருவமத்தி, பிரம்ம மந்திரம் என்ற ஸ்தானங்களைக் கடந்து மேலே சென்று நிறை உடையதாய் மெய்ப்பொருளாய், சுடர் சோதியாய், உள்ள ஒளிமயமானது ஞான ஒளி வீசி திகழும் நாதாந்தத்தில் சிவயோக நெறியில் சித்தத்தை சிவன் பாளையே வைத்திருப்பார்கள்.
இவ்வாறு பொன்னம்பளத்தில் திருக்கூத்தாடும் சிவபெருமானுடைய திருத்தொண்டின் வழியிலே நின்று அவரை அடைந்தவர்கள் சித்தத்தை சிவன் பாலை வைத்தார்கள் ஆவார்கள் 🙏
Comments
Post a Comment