63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -69 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் 63 nayanmars
63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -69
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
விருத்தாசலம் அருகில் ராஜேந்திர பட்டினம் என்று அழைக்கப்படும் அடியார்கள் எருக்கத்தம் புலியூரில் அவதரித்த திருநீலகண்டரும் மனைவி மதங்கசூளா மணியும் மதுரை திருவாலவாய் கோவில் வாயிலை சார்ந்து நின்று யாழினை மீட்டி சிவபெருமானின் புகழினை பாட அதைக் கேட்டு மகிழ்ந்த ஈசன் திருத்தொண்டார்கள் கனவில் தோன்றி "பாணரை தம் திருமுன் அழைத்து வருக" என்று கூற மறுநாள் அடியார்கள் பாணரை சொக்கலிங்கத்தின் முன் அழைத்துச் செல்ல பாணர் கூடற் பெருமாளின் திரிபுர வரலாற்றையும் யாழினால் இசை அமைத்துப் பாட அப்போது ஈசன் அசரீரியாக பாணர் இசைக்கின்ற சந்தையாழ் தரையிலுள்ள சீதம் தாக்கினால் அதன் நரம்புகளில் இறுக்கம் குறைந்து இனிமை குறையும். அதனால் இவருக்கு பொறுப்பலகை இடுக எனக் கூற அவ்வாறு செய்யப்பட்டது.
Comments
Post a Comment