முலைப்பால் தீர்த்தம் - திருவண்ணாமலை அதிசயங்கள்


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருகே அதாவது சரியாக சொல்ல வேண்டும் என்றால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள மேற்கு கோபுரம் என்ற பே. கோபுரத்தில் எதிர் திசையில் நடந்தால் அதாவது திருவண்ணாமலை மேல் சிறிது தூரம் நடந்தால் அங்கே சடை சாமி ஆசிரமம் என்று ஒரு ஆசிரமம் வரும் ...‌‌

அந்த சடை சாமி ஆசிரமத்தையும் கடந்து சில நிமிடங்கள் நடந்தால் அங்கே நாம் முலைப்பால் தீர்த்தத்தை காணலாம் . 

இந்த திட்டம் பார்ப்பதற்கு தாய்ப்பால் நிறத்தில் இருப்பதாலும், இந்த தீர்த்தத்தை நாம் உள்ளுக்கு குடித்தால் தாய்ப்பால் அதாவது ஒரு தாயின் முலைப்பால் அந்த குழந்தைக்கு எவ்வளவு சக்தி அளிக்குமோ! அந்த அளவிற்கு இந்த முலைப்பால் தீர்த்தம் அதை பருகுவோருக்கு சக்தி அளிக்கும் என்பது சிவனடியார்களின் நம்பிக்கை.

அதுவும் இல்லாமல் மலை மேல் உள்ள பல அபூர்வமான மூலிகைகளை தொட்டு இந்த தண்ணீர் இங்கே வந்து தங்குவதால் மூலிகைகளின் குணம் இந்த முலைப்பால் தீர்த்தத்திற்கு இருப்பதாக நம்பப்படுகிறது அதனால் இந்த முலைப்பால் தீர்த்தத்தை குடிக்கும் பொழுது நம் உடலில் இருக்கும் நோய்கள் தீருவதாக மக்களால் நம்பப்படுகிறது ஓம் நமசிவாய 🙏

Comments