சதுரகிரி அதிசயங்கள் - யானை சலிம்பு - யானைகள் உரசும் மரம்

 சதுரகிரி மலையில் அடியேன் சில நாட்கள் தங்கும் பெரும் பாக்கியம் இறைவனின் அருளால் எமக்கே கிடைத்தது 🙏 

அந்த நாட்களில் எமக்கு பல்வேறு அமானுஷ்யமான ஆச்சரியமான அபூர்வமான காட்சிகளை இறைவன் எமக்கு காட்டினான் .. 

அமானுஷ்யமான ஆச்சரியமான பல விஷயங்களை உங்களுடன் வரும் காலங்களில் பகிர்ந்து கொள்வேன் ஆதாரத்துடன்.

அந்த வகையில் இந்த பதிவில் யார் அதுவரை பார்த்திராத ஒரு காட்சி அதாவது யானைகள் உரசும் மரம் யானைகள் உரசி உரசி அந்த மரமே வழவழப்பாகி இருந்ததை பார்த்து சற்றே ஆச்சரியப்பட்டு விட்டோம். 

அந்த மரத்தின் அருகிலேயே சிறிது நீரும் ஒரு வகையான உப்பு போன்ற மண்ணும் இருப்பதை பார்த்தோம் அங்கே வரும் யானைகள் அந்த மண்ணை எடுத்து தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு சிறிது நேரம் ஊற வைத்து பின்பு அருகே இருக்கும் மரத்தில் உரசுமாம் .. 

அப்படி யானைகள் உரசி உரசி அந்த மரமே வழவழப்பாக மாறி இருப்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்... 

ஓம் நமசிவாய 🙏



Comments