கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி கோவில் வரலாறு 🙏

 கொல்லிமலையில் பல அதிசயமான அபூர்வமான இடங்கள் உள்ளன என்று சில பதிவுகளாக பார்த்து வருகிறோம் அந்த வகையில் இந்த பதிவில் கொல்லிமலைக்கு காவல் தெய்வமாக விளங்குவதாக அங்கிருக்கும் மக்களால் நம்பப்படும் மாசி பெரியண்ணசாமி கோவிலின் வரலாறை சுருக்கமாக பார்ப்போம்.


பல வருடங்களுக்கு முன்பு சிவபெருமான் தென்பகுதியை நோக்கி வந்ததாகவும் அவர் சென்று நீண்ட நாட்களாக கைலாயம் திரும்பாத காரணத்தினால் பார்வதி தேவி சிவபெருமானை தேடி கண்டுபிடிப்பதற்காக கைலாயத்திலிருந்து கிளம்பியதாகவும் அப்பொழுது அங்கே வந்த விஷ்ணு பகவான் தன் தங்கை தனியாக செல்வதை விரும்பாமல் தானும் வருவதாக கூறிக்கொண்டு இருவரும் சேர்ந்து சிவபெருமானை தேடுவதற்காக மாந்தரூபம் தரித்து தென்பகுதியை நோக்கி வந்ததாகவும் வரலாறு கூறுகிறது..


அப்படி தென்பகுதியில் ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டே வரும் பொழுது இறுதியாக வந்த இடம் தான் கொல்லிமலை இந்த கொல்லிமலையில் அடிவாரத்திலே ஒரு இடத்தில் பார்வதி தேவியை அம்மா நீ இங்கேயே இரு யாம் சென்று ஐயனை தேடி கண்டுபிடித்து வருகிறோம் என்று விஷ்ணு பகவான் பார்வதி பிராட்டியிடம் சொல்லிவிட்டு கொல்லிமலையில் மேலே ஒரு குன்றின் மேல் நிற்கும் போது அந்த குன்று ஸ்ரீ விஷ்ணுவின் கனம் தாங்காமல் ஆடியதாகவும் அதன் காரணமாக ஸ்ரீ விஷ்ணு ஒவ்வொரு குன்றாக தாவித்தாவி சென்று எட்டாவதாக நின்ற குன்று தான் மாசி குன்று என்றும் அந்த குன்று கொல்லிமலையில் இருக்கும் அனைத்து மலைகளை விட உயர்வான மலை என்றும் மாசி குன்று மட்டுமே விஷ்ணு பகவானே தாங்கியதால் அது மாசி பெரியண்ணசாமி என்று அழைக்கப்படுகிறது இங்கே வந்த இவர் அதாவது விஷ்ணு பகவானை மானிட ரூபத்தில் பார்த்த அங்கே இருந்த மக்கள் அவர் மீது அளப்பரிய வகையில் அன்பு செலுத்தியதால் அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு மாசி பெரிய ஆண்டவர் அங்கேயே தங்கி விட்டதாக புராணம் கூறுகிறது.


குறிப்பு:- 

இந்த கோவிலுக்கு யாம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தோம் அப்பொழுது மாசி பெரியண்ணசாமி அமர்ந்திருக்கும் ஒரு ஓலை குடிசையும் அதாவது அங்கே மலையில் கிடைக்கும் பொருட்களால் பெய்யப்பட்ட ஒரு குடிசையும் அந்த குடிசையின் அருகிலேயே ஒரு பத்து பதினைந்து சூலாயுதங்களும் மட்டுமே இருந்தது ஆனால் இப்பொழுது ஏன் ஏன் மாசி பெரியசாமி கோவிலுக்கு போகும் போது சற்று அதிர்ச்சி அடைந்து விட்டோம் அந்த அளவிற்கு அந்த மலை மேல் கோவில் நல்ல முறையில் டெவலப் ஆகி இருக்கும் அதிசயத்தை பார்க்க முடிகிறது.


மாசி பெரியண்ணசாமியின் வரலாறை சுருக்கமாக வீடியோ பதிவாக கீழே கொடுத்துள்ளேன் மக்கள் பார்த்து மாசி பெரியண்ணசாமி அருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.🙏

 ஓம் நமசிவாய🙏


Comments