திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 1 பாயிரம் 1. கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
SHIVA VISHNU TV
பாடல் - 1
ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான்இருந்தான்; உணர்ந்து எட்டே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
ஒரு பொருளான சிவபெருமானே இனிய சக்தியுடன் இரண்டாய் உள்ளவன்; நான்முகன் திருமால் உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நிற்பவன்; அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் உணர்ந்தவன்; மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்து பொறிகளையும் வென்றவன்; மூலாதாரம் சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆய ஆறு ஆதாரங்களில் விரிந்தவன்; அதற்கு மேல் ஏழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன்; நிலம், நீர், காற்று, தீ, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா என்னும் எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குபவன்.
சிவபெருமான் ஒருவனே சக்தியுடன் இரண்டாகவும், மூன்று மூர்த்திகளாயும், படைத்தல் தொழிலை நான்கு வேதங்களால் உண்மையை விளங்கச் செய்பவனாயும், ஐந்து பொறிகளை அளிப்பவனாயும், ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும், சகசிரதளத்தின் பொருந்தி அட்ட மூர்த்தமாயும் விளங்குகிறான் என்பதாம்.
- தொடரும்..
Comments
Post a Comment