திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 10 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 10  

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து 

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 




தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்;
தானே சுடும் அங்கி, ஞாயிறும் திங்களும்;
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
தானே தடவரை, தண்கடல் ஆமே,



சிவபெருமானான தானே இவ்வுலகத்தைத் தாங்கிக் கொண்டு வாண வடிவாய் விளங்குபவன். அப்பெருமானே சுடும் தீயாகவும் கதிரவனாகவும் சந்திரனாகவும் இருக்கின்றான். அவனே அருள்மழை பெய்யும் சத்தியுமாக இருக்கின்றான். அவனே அகன்ற மலையாகவும் குளிர்ந்த கடலாகவும் உள்ளான்.

Comments