திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 10 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 10
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்;
தானே சுடும் அங்கி, ஞாயிறும் திங்களும்;
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
தானே தடவரை, தண்கடல் ஆமே,
சிவபெருமானான தானே இவ்வுலகத்தைத் தாங்கிக் கொண்டு வாண வடிவாய் விளங்குபவன். அப்பெருமானே சுடும் தீயாகவும் கதிரவனாகவும் சந்திரனாகவும் இருக்கின்றான். அவனே அருள்மழை பெய்யும் சத்தியுமாக இருக்கின்றான். அவனே அகன்ற மலையாகவும் குளிர்ந்த கடலாகவும் உள்ளான்.
Comments
Post a Comment