திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1015 to 1044 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 4, நவகுண்டம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1015  to 1044

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv



  நான்காம் தந்திரம்

  4. நவகுண்டம்‌


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

1015

நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்

நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்

நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்

நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

 1016

  உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்

நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்

பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே

மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

  1017

 மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்

கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்

பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது

நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

  1018

 கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்

அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்

பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்

இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

1019

 எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்

பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்

கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே

கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.  


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                                    

1020 

 கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்

ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்

பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ

நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

1021

 நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்

கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்

பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்

நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. 


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                                   S


 1022

 நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்

சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா

மெல்லநின் றாளை வினவகில் லாதவர்

கல்லதன் றாளையும் கற்றும் வின் னாளே. 


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

 1023

 வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்

சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்

பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்

என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                             


 1024

  இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக

நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்

சகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப

முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

1025

  முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்

அக்கணன் தானே அகிலமும் உண்டவன்

திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்

எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                             


1026

 எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்

தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்

கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்

மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

  1027 

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்

ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்

வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழ

நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.  


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                            


1028

 நல்லொளி யாக நடந்துல கெங்கும்

கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்

சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்

கல்லொளி கண்ணுளு மாகிநின் றாளே.


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

  1029 

 நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்

பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்

கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ

விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.  


          SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                                     


1030 

 எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்

கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்

படித்துஎண்ணு நாவெழு கொம்பொரு நாலும்

அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

1031

  அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை

அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை

அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை

அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. 


          SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                     


 1032 

பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு

மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை

கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்

பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

 1033

  பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு

காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்

பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி

நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.  


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                           


1034

  அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்

மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்

பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்

கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.  


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

1035

  முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்

கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்

பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்

செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே. 

                                         

        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

 1036

  சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்

ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்

பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்

காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. 


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

 1037

 மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்

உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்

செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்

பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.   


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

                           

1038

  கலந்திரு பாதம் இருகர மாகு

மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு

மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி

உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. 


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV


 1039

  உத்தமன் சோதி உளனொரு பாலனாய்

மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்

பச்சிம திக்கும் பரந்து குழிந்தன

சத்திமா னாகத் தழைத்த கொடியே. 


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                        


  1040

  கொடியாறு சென்று குலாவிய குண்டம்

அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்

படிஏழ் உலகும் பரந்த சுடரை

மடியாது கண்டவர் மாதன மாமே.


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV


1041 

 மாதன மாக வளர்கின்ற வன்னியைச்

சாதன மாகச் சமைந்த குருவென்று

போதன மாகப் பொருந்த உலகாளும்

பாதன மாகப் பிரிந்தது பார்த்தே. 


          SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV                                 


 1042

 பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை

ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை

காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்

மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 


        SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV

 

1043

  உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க

அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்

பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்

சகங்கண்டு கொண்டது சாதன மாமே.


         SHIVA VISHNU TV                 SHIVA VISHNU TV                SHIVA VISHNU TV  

                       

  1044

 சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்

வேதனை வட்டம் விளையாறு பூநிலை

போதனை போதுஐஞ்சு பொய்கய வாரண

நாதனை நாடு நவகோடி தானே. 

Comments