திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1319 to 1418 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 13. நவாக்கரி சக்கரம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1319  to 1418 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv




  நான்காம் தந்திரம்

 13. நவாக்கரி சக்கரம்‌


1319

நவாக்கரி சக்கர நானுரை செய்யின்

நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக

நவாக்கரி எண்பத் தொருவகை யாக

நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1320

 சௌமுதல் அவ்வவொடு ஹௌவுட னாங்கிரீம்

கெளவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்

றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்

செவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1321 

 நவாக்கரி யாவது நானறி வித்தை

நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்

நவாக்கரி மந்திர நாவுளே ஓத

நவாக்கரி சத்தி நலந்தருந் தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1322  

நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம்

உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடிச்

சிரந்தரு தீவினை செய்வ தகற்றி

வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1323 

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை

கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை

வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்

நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1324

 நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா

நினைத்திடுஞ் சக்கர மாதியு மீறு

நினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளே

நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1325

 நேர்தரு மத்திரு நாயகி யானவள்

யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை

கார்தரு வண்ணங் கருதின கைவரும்

நார்தரு வண்ணம் நடத்திடு நீயே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1326 

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங்

கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும்

படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல

அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1327

  அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்

அடைந்திடு மாதி யருளுந் திருவும்

அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்

அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1328

  அறிந்திடுவார்கள் அமரர்க ளாகத்

தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்

பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி

முரிந்திடு வானை முயன்றிடு நீரே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1329

  நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்

பாரணி யும்ஹிரீ முன்ஸ்ரீமீறாந்

தாரணி யும்புகழ்த் தையல்நல் லாள்தனைக்

காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1330

  கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும்

மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்

பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்

நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1331 

 பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்

நாடுடை யார்களும் நம்வச மாகுவர்

மாறுடை யார்களும் வாழ்வது தானிலை

கூறுடை யாளையுங் கூறுமின் நீரே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1332 

கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியை

யாறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வென

மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்

தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1333

 சேவடி சேரச் செறிய இருந்தவர்

நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்

பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்

மாவடி காணும் வகையறிவாரே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1334 

ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கர

மைம்முத லாக அமர்ந்திரீ மீறாகும்

அம்முத லாகி யவர்க்குடை யாடனை

மைம்முத லாக வழுத்திடு நீயே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1335 

வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்

பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்

தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை

முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1336

 கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடிற்

கொண்ட இம் மந்திரங் கூத்தன் குறியதா

மன்றினுள் வித்தையு மானுடர் கையதாய்

வென்றிடும் வையக மெல்லியல் மேவியே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1337 

 மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்

சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்

பல்லிய லாகப் பரந்தெழு நாட்பல

நல்லியல் பாலே நடந்திடுந் தானே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1338

 நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந்

தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும்

கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப்

படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1339 

 பகையில்லை கௌமுத லையது வீறா

நகையில்லை சக்கர நன்றறி வார்க்கு

மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்

வகையில்லை யாக வணங்கிடுந் தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1340

  வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை

நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்

கலங்கிடுங் காம வெகுளி மயக்கந்

துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1341 

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்

தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்

தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்

தானே வணங்கித் தலைவனு மாமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1342

  ஆமே அனைத்துயி ராகிய அம்மையுந்

தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்

ஆமே யவனடி போற்றி வணங்கிடிற்

போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1343

 புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்

கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுங்

தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்

அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1344 

தானது கம்மீறிக் கௌவது ஈறாம்

நானது சக்கர நன்றறி வார்க்கெலாம்

கானது கன்னி கலந்த பராசத்தி

கேளது வையங் கிளரொளி யானதே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1345

  ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற்

களிக்கும்இச் சிந்தையிற் காரணங் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வமுண் டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1346

அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடே

எறிந்திடும் வையத் திடரவை காணின்

மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்

பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1347

புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங்

குகையில்லை கொல்வ திலாமையி னாலே

வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்

சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1348

  சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்

காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்

பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது

மாய்ந்தது காரிருள் மாறொளி தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1349

  ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாங்

களியது சக்கரங் கண்டறி வார்க்குத்

தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்

பணிவது பஞ்சாக் கரமது வாமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1350

ஆமே சதாசிவ நாயகி யானவள்

ஆமே அதோமுகத் துள்ளறி வானவள்

ஆமே சுவையொளி யூறோசை கண்டவள்

ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1351

 தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்

டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்

மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங்

கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


.  1352

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன

காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்

காணலு மாகுங் கலந்து வழிசெயக்

காணலு மாகுங் கருத்துற நில்லே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1353

 நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்

கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக்

கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்

விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1354

 மெய்ப்பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக்

கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்

தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி

நற்பொரு ளாக நடுவிருந் தாளே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1355

  தாளதி னுள்ளே சமைந்தமு தேஸ்வரி

காலது கொண்டு கலந்துற வீசிடில்

நாளது நாளும் புதுமைகள் கண்டபின்

கேளது காயமுங் கேடில்லை காணுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1356

 கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின்

நாடில்லை காணும் நாண்முத லற்றபின்

மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்

காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1357

 உற்றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக்

கற்றிட மெல்லாங் கடுவெளி யானது

மற்றிட மில்லை வழியில்லை தானில்லை

சற்றிடமில்லை சலிப்பற நின்றிடே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1358

 நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்

நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்

நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட

நின்றிடும் மேலை விளக்கொளி தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1359

  விளக்கொளி சௌமுத லெளவது ஈறா

விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்

விளக்கொளி யாகிய மின்கொடி யாளை

விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1360

 விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்

விளங்கிடு மெல்லிய லானது வாகும்

விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப்பொருளை

விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1361

  தானே வெளியென எங்கும் நிறைந்தவள்

தானே பரம வெளியது வானவள்

தானே சகலமு மாக்கி அழித்தவள்

தானே யனைத்துள அண்ட சகலமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1362

 அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்

பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்

குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்

கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1363

 கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாம்

உலப்பறி யாருட லோடுயிர் தன்னை

சிலப்பறி யார்சில தேவரை நாடித்

தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1364

தானே எழுந்தஅச் சக்கரஞ் சொல்லிடின்

மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்

தேனே யிரேகை திகைப்பற ஒன்பதில்

தானே கலந்த வரையெண்பத் தொன்றுமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1365

  ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்

வென்றிகொள் மேனிமதிவட்டம் பொன்மையாங்

கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்

என்றிய லம்மை எழுத்தவை பச்சையே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



1366

 ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய

வாய்ந்தஇப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின்

காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமு

மாய்ந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1367

 பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி

எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்

நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்

துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1368

ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி

போகின்ற சாந்து சவாது புழுகுநெய்

ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்

சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1369  

வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற்

கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்

தச்சிது வாகச் சமைத்தஇம் மந்திரம்

அர்ச்சனை யாயிரம் ஆயிரம் சிந்தியே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1370 

 சிந்தையி யுள்ளே திகழ்தரு சோதியாய்

எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது

பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு

முந்தை கிலீமெழ முன்னிருந் தாளே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1371

  இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்

இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்

இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே

இருந்தனர் இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1372

 கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்

கண்டஇம் முத்தங் கனல்திரு மேனியாய்ப்

பண்டமர் சோதிப் படரித ழானவள்

உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே. 



 1373 

 உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்

கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்

மணந்தெழும் ஓசை யொளியது காணுந்

தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1374

தருவழி யாகிய தத்துவ ஞானங்

குருவழி யாகுங் குணங்களுள் நின்று

கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்

பெருவழி யாக்கும் பேரொளி தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1375 

பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்

சீரொளி யாகித் திகழ்தரு நாயகி

காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்

பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1376

 பரந்த கரம்இரு பங்கயமேந்திக்

குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணி

பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்

இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



1377

 மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கை

அணிபவ ளன்றி யருளில்லை யாகுந்

தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்

பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.



  1378

  பரந்திருந் துள்ளே அறுபது சத்தி

கரந்தன கன்னிகள் அப்படி சூழ

மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்

சிறந்தவர் ஏத்தும் சிரீம்தன மாமே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



1379

தனமது வாகிய தையலை நோக்கி

மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்

கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்

தினகர னாரிட செய்திய தாமே

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1380 

 ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்

பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்

போகின்ற பூரண மாக நிறைந்தபின்

சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1381 

ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்

ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்

ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரு

ஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1382

 சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்

ஆங்கணி முத்தம் அழகிய மேனியுந்

தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்

ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1383

பாசம தாகிய வேரை யறுத்திட்டு

நேசமா தாக நினைத்திரு மும்முளே

நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற்

காசினி மேலமர் கண்ணுத லாகுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1384 

 கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி

பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்

விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார

மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1385

 மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்

கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்

விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்

தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


   1386

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்

தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் (1)வானவள்

ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட

வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



1387

நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்

பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்

பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்

ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1388

  அன்றிரு கையில் அளந்த பொருள்முறை

இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை

மன்றது காணும் வழியது வாகவே

கண்டங் கிருந்தவர் காரணி காணுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1389  

காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்

காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்

காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்

காரணி தன்னரு ளாகிநின் றாளே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1390

 நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடிற்

கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற்

கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்

மன்றினி லாடு மணியது காணுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1391

 கண்டஇச் சத்தி இருதய பங்கயங்

கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்

பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட

இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1392

 இருந்தவிச் சத்தி இருநாலு கையிற்

பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்

கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்

குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1393

 உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்

பரந்த பவளமும் பட்டாடை சாத்தி

மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து

தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1394  

பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு

கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற்

கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்

எச்ச விடைச்சி இனிதிருந் தாளே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1395

 தாளதி னுள்ளே தாங்கிய சோதியைக்

காலது வாகக் கலந்துகொள் என்று

மாலது வாக வழிபாடு செய்துநீ

பாலது போலப் பரந்தெழு விண்ணிலே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1396

  விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்

கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்

பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது

தன்னமர் கூபந் தழைத்தது காணுமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1397

 கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள

தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்

ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து

பாசம் அறுக்கப் பரந்தன சூலமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1398 

சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்

வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு

காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு

கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1399

 எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்

எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்

எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1400

 கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு

தொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப்

படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு

மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1401

நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே

கண்டிடு மேரு வணிமாதி தானாகிப்

பண்டைய வானின் பகட்டை யறுத்திட்

டொன்றிய தீபம் உணர்ந்தார்க் குண்டாமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



  1402

 உண்டோர் அதோமுகம் உத்தம மானது

கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி

கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும்

ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1403

    நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்

பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகுங்

கண்மணி தாமரைக் கையில் தமருகம்

பொன்மணி பூணாரம் பூசனை யானதே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1404

  பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவே

நேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்

காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்

மாசடை யாமல் மகிழ்ந்த்திருந் தார்களே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1405

  தாரத்தி னுள்ளே தங்கிய சோதியைப்

பாரத்தி னுள்ளே பரத்துள் எழுந்திட

வேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங்

காரது போலக் கலந்தெழு மண்ணிலே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1406

 மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்

விண்ணில் எழுந்து சிவாய நமவென்று

கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்

கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1407

  என்றங் கிருந்த அமுத கலையிடைச்

சென்றங் கிருந்த அமுத பயோதரி

கண்டங் கரமிரு வெள்ளிபொன் மண்ணடை

கொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே.  

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


1408

 அமுதம தாகிய அழகிய மேனி

படிகம தாகப் பரந்தெழு முள்ளே

குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்

கெமுதம தாகிய கேடிலி தானே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1409 

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்

நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்

பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்திவர்

நாளிலி தன்னை நணுகிநின் றார்களே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1410

 நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியுங்

கண்டது சோதி கருத்துள் இருந்திடக்

கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு

விண்டவௌ காரம் விளங்கின அன்றே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1411

  விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம்

வணங்கிடு மண்டலம் மன்னுயிராக

நலங்கிளர் நன்மைகள் நாரணனொத்துச்

சுணங்கிடை நின்றிவை சொல்லலு மாமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV



 1412  

ஆமே அதோமுக மேலே அமுதமாய்த்

தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்

காமேல் வருகின்ற கற்பக மானது

பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1413

 பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட

அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்

மற்கட மாகிய மண்டலந் தன்னுளே

பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


  1414

  பேதை யிவளுக்குப் பெண்மை அழகாகும்

தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும்

மாதை யவளுக்கு மண்ணுந் திலகமாய்க்

கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1415

  குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்

நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்

பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே

இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1416

 கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்

கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது

பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்

இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1417

  இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை

இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை

இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்

இல்லடைந் தானுக் கில்லாதில் லானையே. 

  SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV


 1418

 ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி

ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி

ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை

ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.


                            நான்காம் தந்திரம் முற்றிற்று 


Comments