திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1451 to 1456 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 6. கிரியை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1451  to 1456

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv



  ஐந்தாம்‌ தந்திரம்‌

  6. கிரியை


1451

பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்

டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க்

கொத்துத் திருவடி நீழல் சரணெனத்

தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

  SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV  

  1452

  கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுறு மாமல ரிட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது

தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV  

  1453 

 கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்

ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்

வானக்கன் றாகிய வானவர் கைதொழு

மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV  

 1454

 இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்

அதுபணி செய்கின் றவள் ஒரு கூறன்

இதுபணி மானுடர் செய்பணி யீசன்

பதிபணி செய்வது பத்திமை காணே. 

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV  


 1455

  பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்

சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.


  1456

 அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்

செம்பொன்செய் மேனி கமலத் திருவடி

முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்

என்பினுட் சோதி இலங்குகின் றானே. 

Comments