திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1514 to 1529 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 17. சக்தி நிபாதம்‌

 

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 1514  to 1529

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஐந்தாம்‌ தந்திரம்‌

 17. சக்தி நிபாதம்‌



1514

இருட்டறை மூலை யிருந்த கிழவி

குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்

குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி

மருட்டி யவனை மணம்புரிந் தாளே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1515 

தீம்புல னான திசையது சிந்திக்கில்

ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்

தேம்புல னான தெளிவறி வார்கட்குக்

கோம்புல னாடிய கொல்லையு மாமே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1516

 இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி

அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்

மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்

பொருள்நீங்கா இன்பம் புலம்பயின் றானே.  

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


1517 

 இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்

பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்

மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி

அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 


     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1518

  மந்ததரம்மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி

வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்

குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி

அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே.  

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 



1519

  கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்

கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்

கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்

பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.  

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


1520

 செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்

எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை

மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்

கைய னிவனென்று காதல்செய் வீரே.  


     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


1521

  எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்

தையலுந் தானுந் தனிநா யகமென்பர்

வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்

கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1522

  கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி

பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்

வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்

நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 



 1523  

தீவிரம்அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்

எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்

உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்

கண்ணுற்று நின்ற கனியது வாகுமே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1524 

 பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்

மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்

குறப்பெண் குவிமுலை கோமள வல்லி

சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 


     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1525

  தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்

பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்

ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்

தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1526 

 நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்

பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்

அணுகிய தொன்றறி யாத வொருவன்

அணுகும் உலகெங்கு மாவியு மாமே.

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1527 

 தீவிரதரம்இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி

குருவென வந்து குணம்பல நீக்கித்

தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்

திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1528 

 இரவும் பகலும் இலாத இடத்தே

குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி

அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்

பரிவொன்றி லாளும் பராபரை தானே.  

     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


1529

  மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்

சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்

ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)

ஊனை விளக்கி யுடனிருந் தானே.  

Comments