திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1530 to 1549 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 18. புறச்சமய தூஷணம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1530  to 1549

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv



  ஐந்தாம்‌ தந்திரம்‌

 18. புறச்சமய தூஷணம்‌


1530

ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா

மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்

பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.  

   SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

  1531

 உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்

வள்ளல் தலைவன் மலருறை மாதவன்

பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்

கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.  

   SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

1532

 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்

குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்

குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. 

   SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1533

  ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்

ஆறு சமயப் பொருளும் அவனலன்

தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே.

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

  1534 

 சிவமல்ல தில்லை யறையே சிவமாந்

தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)

அவமல்ல தில்லை அறுசம யங்கள்

தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

  1535

 அண்ணலை நாடிய ஆறு சமயமும்

விண்ணவ ராக மிகவும் விரும்பியே

முண்ணின் றழியு முயன்றில ராதலான்

மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

  1536

  சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்

பவகதி பாசப் பிறவியொன் றுண்டு

தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்

அவகதி மூவரும் அவ்வகை யாமே.  

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

1537

 நூறு சமயம் உளவா நுவலுங்கால்

ஆறு சமயமவ் வாறுட் படுவன

கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா

ஈறு பரநெறி யில்லா நெறியன்றே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1538  

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்

சுத்த சிவமெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்

குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்

பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1539

 மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்

முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி

இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்

பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1540

  சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி

தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு

மாயன் மயக்கிய மானுட ராமவர்

காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.  

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

1541 

வழியிரண் டுக்குமோர் வித்தது வான

பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்

சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்

றழிவறி வார்நெறி நாடநில் லாரே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1542 

 மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்

நாதம தாக அறியப்படுநந்தி

பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்

ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1543 

 அரநெறி யப்பனை யாதிப் பிரானை

உரநெறி யாகி யுளம்புகுந் தானைப்

பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்

பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1544

 பரிசறி வானவன் பண்பன் பகலோன்

பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்

துரிசற நீநினை தூய்மணி வண்ணன்

அரிதவன் வைத்த அறநெறி தானே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 


 1545 

 ஆன சமயம் அதுஇது நன்றெனும்

மாய மனிதர் மயக்க மதுவொழி

கானங் கடந்த கடவுளை நாடுமின்

ஊனங் கடந்த வுருவது வாமே.  

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

1546

  அந்நெறி நாடி அமரர் முனிவருஞ்

செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்

முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்

சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1547  

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி

பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை

அறுமா றதுவான வங்கியு ளாங்கே

இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1548  

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்

கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்

சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்

பழிநடப் பார்க்குப் பரவலு மாமே. 

 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

 1549

  வழிசென்ற மாதவம் வைகின்ற போது

பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே

வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்

டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.  

Comments