திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1550 to 1556 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம் தந்திரம் 19. நிராகாரம்
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல்கள் - 1550 to 1556
thirumoolar thirumandhiram
shiva vishnu tv
ஐந்தாம் தந்திரம்
19. நிராகாரம்
1550
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
1551
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
1552
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
1553
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
1554
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
1555
மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
1556
ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.
Comments
Post a Comment