திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1557 to 1572 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 20.உட்சமயம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1557 to 1572

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஐந்தாம்‌ தந்திரம்‌

  20.உட்சமயம்


1557

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்

அமைய வகுத்தவன் ஆதி புராணன்

சமயங்க ளாறும்தன் றாளிணை நாட

அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1558

  ஒன்றது பேரூர் வழியா றதற்குள

என்றது போல இருமுச் சமயமும்

நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்

குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1559

  சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை

உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை

மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்

வையத் தலைவனை வந்தடைந் துய்மினே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1560  

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்

பவனவன் வைத்த பழிவழி நாடி

இவனவன் என்ப தறியவல் லார்கட்

கவனவ னங்குள தாங்கட னாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1561 

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்

போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்

காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்

போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1562

  அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்

சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்

உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்

தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1563

  தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி

பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி

ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி

போந்து புனைந்து புணர்நெறி யாமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1564

  ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்

ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே

வாரு மரநெறி மன்னியே முன்னியத்

தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1565 

 மினற்குறி யாளனை வேதியர் வேதத்

தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை

நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி

னயக்குறி காணில் அரநெறி யாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  1566

 ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல

வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி

பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு

தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1567 

 சைவ சமயத் தனிநா யகன்நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு

தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய

வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1568 

 இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி

எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்

ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1569  

ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்

ஆமே பிரானுக் கதோமுக மாறுள

தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்

நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  1570

 ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்

ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்

பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி

ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1571 

 ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்

ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி

ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ

ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 


 1572

 அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை

அறியவொண் ணாத அறுவகை யாக்கி

அறியவொண் ணாத அறுவகைக் கோசத்

தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.


                                                  ஐந்தாம் தந்திரம் முற்றிற்று

Comments