திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1573 to 1589 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 1. சிவகுரு தரிசனம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1573 to 1589

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv 


 ஆறாம்‌ தந்திரம்‌ 

 1. சிவகுரு தரிசனம்‌


1573

பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்

சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்

சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்

சித்தம் இறையே சிவகுரு வாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1574

  பாசத்தைக் கூட்டியே கட்டுப் பறித்திட்டு

நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே

கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த

தாசற்ற சற்குரு அம்பலமாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1575 

 சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய

சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்

சத்தியும்மந்திர சாதக போதமும்

பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1576

  எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்

நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்

எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்

சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1577 

 தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்

யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே

மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்

யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1578

  சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்

தத்தனை நல்கருள் காணா அதிமூடர்

பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்

அத்தன் இவனென் றடிபணிவாரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1579

 உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்

திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்

வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்

அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1580

 சிவனே சிவஞானி யாதலாற் சுத்த

சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு

நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்

பவமான தின்றிப் பரலோக மாமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1581

  குருவே சிவமெனக் கூறினன் நந்தி

குருவே சிவமென் பதுகுறித் தோரார்

குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்

குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1582 

 சித்தம் யாவையுஞ் சிந்தித் திருந்திடும்

அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே

சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்

அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1583

  தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த

கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை

வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்

தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1584 

 திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை

மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்

பொருளாய வேதாந்த போதமும் நாதன்

உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1585

  பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர

சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்

முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை

சத்தி யருள்தரில் தானெளி தாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1586 

 பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை

முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை

தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு

மன்னெய்த வைத்த மனமது தானே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1587 

 சிவமான ஞானந் தெளியவொண் சித்தி

சிவமான ஞானந் தெளியவொண் முத்தி

சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்

சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1588

  அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்

செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்

மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை

பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1589 

 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்

இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்

பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்

கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.  

Comments