திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1778 to 1791 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 8. சம்பிரதாயம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1778  to 1791

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

  8. சம்பிரதாயம்


1778

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு

படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து

நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி

கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1779

 உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான

வியவார் பரமும்பின் மேவும் பிராணன்

செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே

உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


  1780

  பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்

நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்

உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது

வைச்ச பதமிது வாய்திற வாதே

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1781

 பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை

ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்

தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்

வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 

    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 1782 

 தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்

இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்

பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்

கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1783

 கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு

நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்

பாடல் உடலினில் பற்றற நீக்கியே

கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1784

  கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்

கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்

கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்

கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1785

  குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி

நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்

பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை

பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1786

  உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்

உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1787

  காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்

சால விரிந்து குவிந்து சகலத்தில்

ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்

தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1788

 நானென நீயென வேறில்லை நண்ணுதல்

ஊனென ஊனுயிர் என்ன உடனின்று

வானென வானவர் நின்று மனிதர்கள்

தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1789  

அவனும் அவனும் அவனை அறியார்

அவனை அறியில் அறிவானும் இல்லை

அவனும் அவனும் அவனை அறியில்

அவனும் அவனும் அவனிவன் ஆமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1790

நானிது தானென நின்றவன் நாடோ றும்

ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்

வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்

நானிது அம்பர நாதனும் ஆமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1791

 பெருந்தன்மை தானென யானென வேறாய்

இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்

பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே

திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.  


  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

Comments