திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1814 to 1822 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 10. அருள்‌ ஒளி

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1814  to 1822

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv 


 ஏழாம்‌ தந்திரம்‌

  10. அருள்‌ ஒளி



1814

அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்

அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்

அருளின் பெருமை அறியார் செறியார்

அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 

1815

  வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி

ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி

பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்

ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 1816

  ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்

கூடிய வாறே குறியாக் குறிதந்தென்

ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


1817 

 உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்

பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி

அத்தனை நீயென்று அடிவைத்தான் பேர்நந்தி

கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 1818

 விளக்கினை யேற்றி வெளியை அறிமின்

விளக்கினை முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 1819  

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்

ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள

ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


1820

  புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி

நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி

அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த

திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  1821

 அருளது என்ற அகலிடம் ஒன்றும்

பொருளது என்ற புகலிடம் ஒன்றும்

மருளது நீங்க மனம்புகுந் தானைத்

தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1822 

 கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை

வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும்

பாறணி யும்உடல் வீழவிட் டாருயிர்

தேறணியோம்இது செப்பவல் லீரே.   

Comments