திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1823 to 1846 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 11. சிவ பூசை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1823  to 1846

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

  11. சிவ பூசை


1823

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

1824

  வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்

காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்

ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்

பாட்டவி காட்டுதும் பால்அவி யாகுமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1825

 பான்மொழி பாகன் பராபரன் தானாகும்

ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து

மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு

சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

  1826 

 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கனைகழல் ஈசனைக் காண அரிதாம்

கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்

புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1827

 மஞ்சன மாலை நிலாவிய வானவர்

நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்

அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்

அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

  1828

 புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு

அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்

எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை

நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

  1829

 அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்

ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்

சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே

முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  1830

 மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்

சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி

மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 1831

 ஆரா தனையும் அமரர் குழாங்களும்

தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்

பேரா யிரமும் பிரான்திரு நாமமும்

ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  1832  

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்

தான்அந்த மில்லாத் தலைவன் அருளது

தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்

பார்ஐங் குணமும் படைத்துநின் றானே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

1833

  உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி

மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்

தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்

பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1834

  வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு

உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு

கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்

அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

 1835 

கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து

வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்

பழிப்படு வார்பல ரும்பழி வீழ

வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1836 

பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்

பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்

நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர

வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  1837

 ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று

ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்

மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற

தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1838

 தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்

பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை

மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்

நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1839

உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்

பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி

இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி

மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  1840

 வென்று விரைந்து விரைப்பணி என்றனர்

நின்று பொருந்த இறைபணி நேர்படத்

துன்று சலமலர் தூவித் தொழுதிடில்

கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1841

 சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்

ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்

ஆத்தி மலக்கிட்டு அகத்தழுக்கு அற்றக்கான்

மாத்திக்கே செல்லும் வழியது வாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


1842 

 ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற

மேவித் திரியும் விரிசடை நந்தியைக்

கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்

தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1843 

சாண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்

காணும் அளவும் கருத்தறி வாரில்லை

பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு

மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1844 

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி

இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள

வருந்தன்மை யாளனை வானவர் தேவர்

தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1845

  சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்

அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி

சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்

அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 1846

  ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது

ஊழில் உயிரை உணர்வும் தான்ஒட்டா

ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்

ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.  

Comments