திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1857 to 1867 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 13. மகேசுவர பூசை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1857  to 1867

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   13. மகேசுவர பூசை


1857

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


 1858 

தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து

உண்டது மூன்று புவனமும் உண்டது

கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று

எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


1859

 மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை

ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது

மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்

தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


1860  

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்

சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்

பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு

நிகரில்லை என்பது நிச்சயம் தானே.


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 

  1861

 ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்

கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்

நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை

பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


1862 

 ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று

நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்

ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று

வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


  1863

 சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட

பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை

நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்

பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 

  1864

 அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்

தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்

பழுது படாவண்ணம் பண்பனை நாடித்

தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


 1865

  பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்

புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி

அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


 1866  

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண் 

அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்

சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்

முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 


 1867

 தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்

ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்

ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்

போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே

Comments