திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1923 to 1936 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 20. விந்துஉற்பனம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1923  to 1936

  thirumoolar thirumandhiram

   shiva vishnu tv


    ஏழாம்‌ தந்திரம்‌

   20. விந்துஉற்பனம் 


1923

உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்

உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்

விதியில் பிரமாதி கள்மிகு சத்தி

கதியில் கரணம் கலைவை கரியே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


1924

 செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்

செய்திடும் நாதபேதத்திற னாலாறும்

செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்

செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1925

 வந்திடு பேத மெலாம்பர விந்து

தந்திடு மாமாயை வாகேசி தற்பரை

உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி

விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1926

 விளங்கு நிவர்த்தாதி மேவக ராதி

வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து

களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி

உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1927 

 அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்

வந்த வியாபி எனலாய அந்நெறி

கந்தம தாகிய காரண காரியம்

தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே.  


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1928

  வீயம தாகிய விந்துவின் சத்தியால்

ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்

காயஐம் பூதமும் காரிய மாயையில்

ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1929

  புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து

நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை

உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்

திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1930

 கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற

நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்

கண்டக லாதியின் காரண காரியத்து

அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1931 

 அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி

இதுவித்தி லேஉள வாற்றை உணரார்

மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்

பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1932

  வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை

வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை

வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல

அத்தன்மை யாகும் அரநெறி காணுமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1933

 அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்

பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்

திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு

இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1934 

 இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்

உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்

அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்

மருவிய விந்து வளரும்கா யத்திலே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1935 

 காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்

காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து

நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்

மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1936

  அழிகின்ற விந்து அளவை அறியார்

கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார் 

அழிகின்ற காயத்து அழிந்துஅயர் வுற்றோர்

அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.  


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments