திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2084 to 2101 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஏழாம்‌ தந்திரம்‌ 37. கேடு கண்டிரங்கள்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2084  to 2101

  THIRUMOOLAR

 THIRUMANDHIRAM 

SHIVA VISHNU TV


  ஏழாம்‌ தந்திரம்‌

  37.  கேடு கண்டிரங்கள் 


2084


வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்

அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்

உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்

முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2085

  போது சடக்கெனப் போகின் றதுகண்டும்

வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது

நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து

ஆதியை அன்பில் அறியகில் லார்களே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2086

  கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி 

உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்

தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி

இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2087

 விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து

புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன

பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்

உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2088

 நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்

என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்

அன்றி உலகம் அதுஇது தேவென்று

குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2089 

 இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து

இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து

துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்(று)

துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2090

 பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கு அரிய பிரானடி பேணார்

பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்

பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2091

 ஆர்வ மனமும் அளவில் இளமையும்

ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்

தீர வருவதோர் காமத் தொழில்நின்று

மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2092

 இப்பரி சேஇள ஞாயிறு போலுரு

அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை

இப்பரி சேகம லத்துறை ஈசனை

மெய்ப்பரி சேவின வாதுஇருந் தோமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2093  

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு

நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்

பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து

ஆடவல் லார்அவர் பேறெது வாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2094

 நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்

நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்

துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்

அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2095

 மிருக மனிதர் மிக்கோர் பறவை

ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை

பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்

திருமரு மாதவம் சேர்ந்துஉணர்ந் தாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2096 

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்

சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை

ஆதி பயனென்று அமரர் பிரான்என்று 

நாதியே வைத்தது நாடுகின் றேனே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2097

  இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு

பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்

வருந்தேன் நுகராது வாய்புகு தேனை

அருந்தேனை யாரும் அறியகி லாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2098

  கருத்தறி யாது கழிந்தன காலம்

அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்

ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்

வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2099

 குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்

விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த

விதிர்த்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்

கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2100  

கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த

திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்

வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்

நரைஉரு வாச்செல்லும் நாள்இல வாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2101

 வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து

இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை

அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று

விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments