திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2102 to 2121 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஏழாம்‌ தந்திரம்‌ 38. இதோப தேசம்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2102  to 2121

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 ஏழாம்‌ தந்திரம்‌

  38. இதோப தேசம் 


2102

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி

இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்

பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்

சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2103

  செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை

வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை

இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை

நல்ல அரநெறி நாடுமின் நீரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2104

 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2105

 போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை

நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்

காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு

கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2106

  இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்

புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்

எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று

அக்காலம் உன்ன அருள்பெற லாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2107

  போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்

ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்

சாகின்ற போதும் தலைவனை நாடுமின்

ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2108

 பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்

இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்

சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்

பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2109

 கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்

பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்

ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு

நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2110

 விடுகின்ற சீவனார் மேல்எழும் போது

நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்

கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்

இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   2111

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று

நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்

ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி

வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2112

 இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை

அன்புறு வீர்தவம் செய்யுமெய்ஞ் ஞானத்துப்

பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று

துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2113

  மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு

மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு

மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2114

 சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்

பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்

கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்

சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2115

  முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை

எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை

நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்

அத்தகு சோதி அதுவிரும் பாரே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2116

 நியமத்த னாகிய நின்மலன் வைத்த

உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்

பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்

சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2117

  இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்

துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை

விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை

நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

    2118

 பஞ்சமும் ஆம்புவி சற்குருபால்முன்னி

வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை

அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்

செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   2119

 சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்

அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை

அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்

குருவை வழிபடின் கூடலும் ஆமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2120

 நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்

கருமங்க ளாலே கழிதலில் கண்டு

குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்

பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2121

 ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற

மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்

நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்

மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

ஏழாம் தந்திரம் முற்றிற்று  


Comments