திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2142 to 2166 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 3. அவத்தை பேதம் -கீழாலவத்தை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2142  to 2166

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 எட்டாம் தந்திரம்

 3.  அவத்தை பேதம் -கீழாலவத்தை 


2142

ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம்

கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்

பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை

மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2143

  முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்

செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி

அப்பதி யாகும் நியதி முதலாகச்

செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2144

 இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை

மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்

அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்

பந்தஅச் சாக்கரப்1 பாலது ஆகுமே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2145

  பாரது பொன்மை பசுமை உடையது

நீரது வெண்மை செம்மை நெருப்பது

காரது மாருதம் கறுப்பை உடையது

வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2146

 பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்1 

ஏதம் படஞ்செய்து இருந்த புறநிலை

ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடு

ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2147

 இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை

படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்

உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்

அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2148

  உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பிடை நின்ற உயிரை அறியார்

உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2149

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்

முருக்கும் அசபையை மாற்றி முகந்து

கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து

உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2150

 ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை

அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து

அளிக்கும் கலைகளி னால்அறு பத்து

ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2151

 மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்

பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்

மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்

உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2152

  முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்

வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்

கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை

கன்னியைக் கன்னியே காதலித் தானே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2153

 கண்டகனவு  ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று

உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்

பண்டைய தாகிப் பரந்த வியாக்கிரத்து

அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2154 

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து

ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்

மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை

கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2155

 தானம் இழந்து தனிபுக்கு இதயத்து

மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி

ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தின் 

மேனி அழிந்து சுழுத்தியது ஆமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2156

  சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி

கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி

ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து

விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2157

  தானத்து எழுந்து தருக்குந் துரியத்தின்

வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்

கானத்து எழுந்த கருத்தின் தலையிலே

ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2158

  ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்

ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது

நாமயம் அற்றது நாம்அறி யோமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2159

 துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே

நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன

பரிய புரவியும் பாறிப் பறந்தது

துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2160 

மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்

வேறாய மாயா தனுகர ணாதிக்குஇங்கு

ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து

ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2161

  உண்ணும்தன் ஊடாடாது ஊட்டிடு மாயையும்

அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது

நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து

எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2162

அதிமூட நித்திரை ஆணவம் நந்த

அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி

இதமான கேவலம் இத்திறம் சென்று

பரமாகா ஐஅவத் தைப்படு வானே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2163

  ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்

தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்

நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை

ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2164

 மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என

விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி

எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்

அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2165

  படியுடை மன்னவன் பாய்பரி ஏறி

வடிவுடை மாநகர் தான்வரும் போது

அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்

துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2166

  நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்

நேரான வாறுஉன்னி நீடு நனவினில்

நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து

நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.  


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

Comments