திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2187 to 2226 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 6. சுத்த நனவாதி பருவம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2187  to 2226 

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம் 6.

  சுத்த நனவாதி பருவம் 


2187

நானவாதி தூலமே சூக்கப் பகுதி

அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி

தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து

கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  2188

  நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்

நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்

நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்

நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2189


  செறியுங் கிரியை சிவதத் துவமாம்

பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி

குறிதல் திருமேனி குணம்பல வாகும்

அறிவில் சராசரம் அண்டத் தளவே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2190 

 ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்

ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்

போதம் கலைகால நியதிமா மாயை

நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2191 

 தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்

ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்

மாசகல் வித்தை நியதி மகாமாயை

ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2192

  ஆணவம் மாயையும் கன்மமு மாமலம்

காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்

தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்

பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2193

  பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2194

  உடல்இந் தியமனம் ஒண்புத்தி சித்தம்

அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்

கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்

அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2195 

 தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்

சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்

பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்

மற்றது உண்டிக் கன(வு)நன வாதலே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2196

 நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்

கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி

தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை

நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2197

  ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா

ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா

வேறான ஐந்தும் விடவே நனாவினில்

ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2198

  மாயையில் வந்த புருடன் துரியத்தில்

ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்

சேயகே வலவிந் துடன் சென்றக்கால்

ஆய தனுவின் பயனில்லை யாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2199 

அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா

அதீதத் துரியம் அதனால் புரிந்தால்

அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்

முதிய அனலில் துரியத்து முற்றுமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2200

ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்

கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்

பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்

மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2201

  புரியட் டகமே பொருந்தல் நனவு

புரியட் டகந்தன்னில் மூன்று கனவு

புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி

புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2202

  நனவில் நனவு புனலில் வழக்கம்

நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்

நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை

நனவில் துரியம் அதீதத்து நந்தியே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2203

  கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்

கனவினில் கண்டு மறத்தல் கனவாம்

கனவில் சுழுத்தியும் காணாமை காணல்

அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2204 

 சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்

சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்

சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை

சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2205

  துரிய நனவாம் இதமுணர் போதம்

துரியக் கனவாம் அகமுணர் போதம்

துரியச் சுழுத்தி வியோமம் துரியம்

துரியம் பரமெனத் தோன்றிடும் தானே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2206 

 அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்

அறிவுஅறி யாமை அடையக் கனவாம்

அறிவுஅறிய அவ்வறி யாமை சுழுத்தி

அறிவுஅறி வாகும் ஆன துரியமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2207

  தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு

ஞானம் தனதுரு வாகி நயந்தபின்

தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு

மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலிட்டே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2208 

 ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்

எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்

மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை

ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 



2209 

 ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்

ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்

ஈதென்று அறியும் இயல்புடை யோனே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2210

  உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்

அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்

நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி

இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2211

 சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி

ஒத்துறு பாச மலம்ஐந்தோடு ஆறாறு

தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்

வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2212

  சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை

சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்

சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2213

  மலக்கலப் பாலே மறைந்தது சத்தி

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்

மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு

மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2214

 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று

நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு

வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து

பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2215 

 கதறு பதினெட்டுக் கண்களும் போகச்

சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்

விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்

அதிர வருவதோர் ஆனையும் ஆமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

29216

 நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்

கனவகத் தேஉள் கரணங்க ளோடு

முனவகத் தேநின்று உதறியுட் புக்கு

நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2217 

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்

ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்

சென்று துரியாதீ தத்தே சிலகாலம்

நின்று பரனாய் நின்மல னாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2218 

 ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்

தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி

மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி

மோனம் அடைந்தொளி மூலத்த னாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2219 

 மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்

கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற

விண்டலர் தாமரை மேலொன்றும் கீழாகத்

தண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  2220

  போதறி யாது புலம்பின புள்ளினம்

மாது அறி யாவகை நின்று மயங்கின

வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை

சூதறி வாருச்சி சூடிநின் றாரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2221

 கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே

பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்

திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை

வருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றானே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2222

  ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்

தான விளக்கொளி யாம்மூல சாதனத்து

ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு

ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2223

  உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஒதுங்கிய

விண்நாட நின்ற வெளியை வினவுறில்

அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்

கண்ணாடி காணும் கருத்ததுஎன் றானே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2224

 அறியாத வற்றை அறிவான் அறிவான்

அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்

அறியா தவத்தை அறிவானைக் கூட்டி

அறியாது அறிவானை யார்அறிவாரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2225

 துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்

அரியன தூடணம் அந்நன வாதி

பெரியன கால பரம்பிற்றுரியம்

அரிய அதீதம் அதீதத்த தாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2226

  மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்

மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்

கேவல மாகும் சகலமா யோனியுள்

தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments