திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2304 to 2354 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 13. நின்மலாவத்தை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2304  to 2354

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 13. நின்மலாவத்தை 


2304

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள

வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்

ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2305

  காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்

மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்

மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்

காலனும் இல்லை கருத்தில்லை தானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2306

  ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது

தான்மா மறையறை தன்மை அறிகிலர்

ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்

ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2307 

 உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்

கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி

பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து

அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2308

  எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி

நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்

பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்

செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2309

  காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்

வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்

ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்

தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2310 

 ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து

ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்

ஆன வகையை விடும்அடைத் தாய்விட

ஆன மலாதீதம் அப்பரந் தானே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2311 

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்

அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்

சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து

அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2312

 வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை

வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்

வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு

வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2313

  கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை

நிறஞ்சேர் மத்தின் மலத்தினின் நின்ற

அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந்து 

இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2314

 தானே சிவமான தன்மை தலைப்பட

ஆன மலமும்அப் பாச பேதமும்

ஆன குணமும் பரான்மா உபாதியும்

பானுவின் முன்மதி போல்படராவே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2315

 நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு

அருக்கனும் சோமனும் அங்கே அமரும்

திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்

உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2316 

 ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்

ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு

ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு

வானகம் ஏற வழிஎளி தாமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2317 

 ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்

தாடித் தெழுந்த தமருக ஓசையும்

பாடி எழுகின்ற வேதாக மங்களும்

நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2318 

 முன்னை அறிவினில் செய்த முதுதவம்

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்

தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்

பின்னை அறிவது பேயறி வாகுமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2319

 செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்

செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்

செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்

செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


  2320

  தான்அவ னாகும் சமாதிகை கூடினால்

ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்

ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து

ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2321

  தொலையா அரனடி தோன்றும் அச்சத்தி

தொலையா இருளொளி தோற்ற அணுவும்

தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்

தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2322 

 தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி

மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை

தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்

ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2323

  அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்

அறிகின்ற என்னை அறியா திருந்தேன்

அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி

அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2324

  தான்அவ னாகிய ஞானத் தலைவனை

வானவ ராதியை மாமணிச் சோதியை

ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை

ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2325

  ஒளியும் இருளும் பரையும் பரையுள்

அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி

அளியும் அருளும் தெருளும் கடந்து

தெளிய அருளே சிவானந்த மாமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2326

  ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்

தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து

ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்

கோன்அந்தம் வாய்க்கும் மகாவாக் கியமாமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2327

  அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2328  

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்

சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்

சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்

சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2329

  தானே அறியான் அறிவிலோன் தானல்லன்

தானே அறிவான் அறிவு சதசத்தென்று

ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்

தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

  2330

  தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே

தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்

தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே

தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2331 

 தன்னை அறிந்து சிவனுடன் தானாக

மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்

பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி

நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2332  

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்

தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்

மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலான்

மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2333

 உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்

உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்

உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே

உயிர்ச்செயல் அன்றி அவ்வுள்ளத்து ளானே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2334

 தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்

கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்

பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு

அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2335 

 இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி

இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்

சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்று

ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


  2336 

 உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி

உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்

உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே

உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2337 

 சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்

ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்

பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்

ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2338

 எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்

எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்

எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்

எய்தினர் செய்யும் இறையருள் தானே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2339

  திருந்தினர் விட்டார் திருவில் நரகம்

திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்

திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்

திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2340

 அவமும் சிவமும் அறியார் அறியார்

அவமும் சிவமும் அறிவார் அறிவார்

அவமும் சிவமும் அருளால் அறிந்தால்

அவமும் சிவமும் அவனரு ளாமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2341

 அருளான சத்தி அனல் வெம்மை போல

பொருள் அவனாகத்தான் போதம் புணரும்

இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்

திருவருளா னந்தி செம்பொருளாமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2342

 ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்

பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப

ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்

பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2343

  பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்

போதம் புணர்போதம் போதமும் நாதமும்

நாத முடன்நாத நாதாதி நாதமும்

ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2344 

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்

பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி

பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்

ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2345  

ஆறாது அகன்று தனையறிந் தானவன்

ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த

வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்

தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

  2346

  தீண்டற்கரிய அரிய திருவடி நேயத்தை

மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று

தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்

தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2347 

 சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்

சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்

சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்

சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2348

 தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்

தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்

தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்

தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2349

  தன்னினில் தன்னை அறியும் தலைமகன்

தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்

தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்

தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2350 

 அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்

நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை

இருசுட ராகி இயற்றவல் லானும்

ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2351

  மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்

உள்கின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே

கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா

அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2352

 ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று

கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்

தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்

கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2353 

 குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்

குறிஅறி யார்கடங் கூடல் பெரிது

குறிஅறி யாவகை கூடுமின் கூடி

அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 2354 

ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்

வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்

தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்

தானே பிறப்போடு இறப்பறி யாரே.  

Comments