திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2355 to 2369 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 14. அறிவுதயம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2355  to 2369

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

   14. அறிவுதயம் 

2355

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  2356

  அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்

சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று

சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்

பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2357

  அறிவு வடிவென்று அறியாத என்னை

அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி

அறிவு வடிவென்று அருளால் அறிந்தே

அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2358

  அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின் றனமறை ஈறுகள் தாமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2359

  ஆயு மலரின் அணிமலர் தன்மேலே

பாய இதழ்கள் பதினாறும் அங்குள

தூய அறிவு சிவானந்த மாகியே

போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2360

 மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து

முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்

பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்

பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2361

 அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்

அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்

அறிவுஅறி வாக அணிமாதி சித்தி

அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2362

  அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்

அறிவுஅறி யாமை யாரும் அறியார்

அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்

அறிவுஅறி யாமை அழகிய வாறே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2363

 அறிவுஅறி யாமையை நீவி யவனே

பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது

அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்

செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2364 

 அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது

அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது

அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்

அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2365

  மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்

காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்

சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்

பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2366

  என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது

என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2367 

 மாய விளக்கது நின்று மறைந்திடும்

தூய விளக்கது நின்று சுடர்விடும்

காய விளக்கது நின்று கனன்றிடும்

சேய விளக்கினைத் தேடுகின் றேனே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2368

 தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்

நாடுகின் றேன்நல மேஉடை யானடி

பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்

கூடுகின் றேன்குறை யாமனத் தாலே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2369

 முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்

பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்

தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தாள் 

மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

Comments