திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2405 to 2424 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 16. பதி பசு பாசம் வேறின்மை
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல்கள் - 2405 to 2424
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
எட்டாம் தந்திரம்
16. பதி பசு பாசம் வேறின்மை
2405
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2406
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2407
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2408
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2409
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2410
நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2411
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2412
பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2413
பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2414
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2415
படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2416
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2417
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2418
படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2419
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையின் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2420
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2421
நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2422
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2423
பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2424
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
Comments
Post a Comment