திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2425 to 2434 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 17. அடிதலை அறியும் திறம் கூறுதல்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2425  to 2434

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 எட்டாம் தந்திரம் 

17. அடிதலை அறியும் திறம் கூறுதல்  


2425

காலும் தலையும் அறியார் கலதிகள்

கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்

பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்

கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2426

  தலைஅடி யாவது அறியார் காயத்தில்

தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்

தலைஅடி யான அறிவை அறிந்தோர்

தலைஅடி யாகவே தான்இருந் தாரே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2427

  நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற

வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்

பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி

தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2428 

 சிந்தையின் உள்ளே எந்தை திருவடி

சிந்தையும் எந்தை திருவடிக் கீழது

எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்

எந்தையை யானும் அறியகி லேனே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2429 

 பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்

என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்

உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்

சொன்னான்கழலிணை சூடிநின் றேனே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2430 

 பதியது தோற்றும் பதமது வைம்மின்

மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்

நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்

கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2431

 தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்

தரித்து நின்றான் அமராபதி நாதன்

கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை

பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  2432 

 ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள

தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்

நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு

இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

2433

  கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற

மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்

பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள நாடினான்

மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. 


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 2434 

 பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்

குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்

பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்

செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

Comments