திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2478 to 2484 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 24.முச்சொரூபம்

    திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2478  to 2484 

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 24.முச்சொரூபம் 


2478

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்து

ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு

வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு

ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2479 

 மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்

மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள

மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்

காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2480

  உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன

நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய

பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்

அளவும் பெருமையும் ஆரறி வாரே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2481 

 பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து

அருவாய் உருவாய் அருவுரு வாகிக்

குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை

உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2482

 மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து

மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத்

தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்

பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2483

 கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட

நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதம்

சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து

அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2484

 உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி

நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்

அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்

விடம்தரு வாசலை மேல்திற வீரே.  


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments