திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2512 to 2526 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 30. புறங் கூறாமை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2512  to 2526

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 எட்டாம் தந்திரம்

 30. புறங் கூறாமை


2512

பிறையுள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்

நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 2513

  கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்

கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க

பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே

அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


 2514

  கருதலர் மாளக் கருவாயில் நின்ற

பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை

மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்

தருவலர் கேட்ட தனியும்ப ராமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2515 

 பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்

இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்

கணம்பதி னெட்டும் கழலடி காண

வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2516 

 என்னிலும் என்னுயி ராய இறைவனைப்

பொன்னிலும் மாமணி யாய புனிதனை

மின்னிய எவ்வுயி ராய விகிர் தனை

உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2517

 நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை

ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்

வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுத்து

ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


 2518 

 நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்

எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்

பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை

விண்அறி வாளர் விரும்புகின் றாரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2519

  விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்

கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில்

எண்உற வாகமுப் போதும் இயற்றிநீ

பண்ணிடில் தன்மை பராபர னாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


 2520  

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்

பின்தான் அருள்செய்த பேரருளாளவன்

கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்

பொன்றாத போது புனைபுக ழானே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


 2521

  போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி

ஏற்றியே சென்றும் எறிமணி தான்அகக்

காற்றின் விளக்கது காயம் மயக்குறு

மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2522

  நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை

ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை

கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்

மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


 2523 

 ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்

தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண்

டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு

வானகஞ் செய்யு மறவனு மாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


 2524  

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்

தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்

தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்

காமல மற்றார் அமைவுபெற் றாரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2525

  பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்

டிதமுற்ற பாச இருளைத் துரந்து

மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே

திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2526 

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்

முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்

சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

Comments