திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2546 to 2557 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 33. சுத்தா சுத்தம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2546  to 2557

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 33.  சுத்தா சுத்தம்  


2546

நாசி நுனியினின் நான்மூ விரலிடை

ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்

பேசி யிருக்கும் பெருமறை யம்மறை

கூசி யிருக்குங் குணமது வாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 2547

  கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்

துரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிப்

கருவினை யாவது கண்டகன் றன்பின்

புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 2548

 மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்

மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்

மாயை மறைய மறையவல் லார்கட்குக்

காயமும் இல்லை கருத்தில்லை தானே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  2549 

 மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்

கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்

ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து

தாழ அடைப்பது தன்வலி யாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2550

 காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்

காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்

தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்

காயத்துள் நின்ற கருத்தறி யாரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2551

  ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்

ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்

ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்

ஆசூச மானிடம் ஆசூச மாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2552 

 ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு

ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு

ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு

ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2553 

 வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்

சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்

குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்

கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2554 

 தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்

தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை

தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்

தூய்மணி தூயனல் தூயவு மாமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2555

 தூயது வாளா வைத்தது தூநெறி

தூயது வாளா நாதன் திருநாமம்

தூயது வாளா அட்டமா சித்தியும்

தூயது வாளாத் தூயடிச் சொல்லே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2556

 பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை

அருளது போற்றும் அடியவ ரன்றிச்

சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்

மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 2557

  வினையா மசத்து விளைவ துணரார்

வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்

வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்

வினையாளர் மிக்க விளைவறி யாரே.  

Comments