திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2595 to 2609 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 38.வாய்மை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2595  to 2609

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 38.வாய்மை


2595

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்

குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை

அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்

செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2596

  எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு

எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை

எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்

எல்லாம் அறிந்த இறையென லாமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2597 

 தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்

புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து

கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


  2598

  தானே யுலகில் தலைவ னெனத்தகும்

தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்

வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்

ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


  2599 

 அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்

இருளற்ற சிந்தை இறைவனை நாடி

மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்

பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2600 

 மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை

பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை

உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்

மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2601 

 மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்

பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை

கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்

கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2602

  எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்

மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்

பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்

ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2603

  எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்

உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி

பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்

மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2604

  கைகலந் தானை கருத்தினுள் நந்தியை

மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்

பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்

பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2605 

 மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்

கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை

பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங் 

கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2606 

 உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்

மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்

பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு

ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 2607 

 வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு

தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா

தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்

செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


2608

 மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்

துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்

தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்

உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.  

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

2609  

மனமது தானே நினையவல் லாருக்குக்

கினமெனக் கூறு மிருங்காய மேவற்

றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்

புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.  



Comments