திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2698 to 2708 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 5. தூல பஞ்சாக்கரம்

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2698  to 2708

  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

  SHIVA VISHNU TV 


 ஒன்பதாம் தந்திரம்

 5. தூல பஞ்சாக்கரம் 


2698

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்

ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்

ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 

2699

  அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி

உகார முதலாக ஓங்கி உதித்து

மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி

நகார முதலாகும் நந்திதன் நாமமே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2700

  அகராதி ஈரெண் கலந்த பரையும்

உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்

சிகராதி தான்சிவ வேதமே கோணம்

நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2701

 வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி

ஆய இலிங்கம் அவற்றின்மேலே அவ்வாய்த்

தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்

ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2702 

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்

கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது

மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்

அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2703 

 ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்

ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்

சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்

வாயுற ஓதி வழுத்தலும் ஆமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2704

 தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று

உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்

வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்

துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2705 

 குருவழி யாய குணங்களில் நின்று

கருவழி யாய கணக்கை அறுக்க

வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு

அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2706

  வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது

செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்

குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்

குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2707 

 நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று

துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று

மஞ்சு தவழும் வடவரை மீதுறை

அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2708  

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது

இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்

பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்

அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


Comments