திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 3026 to 3046 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 22. சர்வ வியாபி

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2926  to 3046

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 22. சர்வ வியாபி 




3026

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி

ஆயும் அறிவையும் மாயா உபாதியால்

ஏய பரிய புரியும் தனதுஎய்தும்

சாயும் தனது வியாபகம் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3027

 நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை

நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்

ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்

தான்அறிந்து எங்கும் தலைப்பட லாமே 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3028 

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து

உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி

உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்

கடலின் மலிதிரைக் காணலும் ஆமே

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  3029

 பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்

தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்

இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்

பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3030

  உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டும்

சிறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்

இறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி

பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3031 

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்

முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும்

மற்றவ னாய் நின்ற மாதவன் தானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3032

 தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்

ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்

ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்

நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  3033

 நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்

காக்கும் அவனித் தலைவனும் அங்குள

நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி

போக்கும் வரவும் புணரவல் லானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3034

 செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி

ஒழிந்தன வாயும் ஒருங்குடன் கூடும்

கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்

ஒழிந்திலன் ஏழுலகு ஒத்துநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



3035

 உணர்வும் அவனே உயிரும் அவனே

புணர்வும் அவனே புலனும் அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3036

 புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை

நலமையின் ஞான வழக்கமும் ஆகும்

விலமையில் வைத்துள வேதியர் கூறும்

பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3037

  விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்

மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்

தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்

கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3038

 நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி

நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென

நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்

நின்றனன் தானே வளங்கனி யாயே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3039

 புவனா பதிமிகு புண்ணியன் எந்தை

அவனே உலகில் அடர்பெரும் பாகன்

அவனே அரும்பல சீவனும் ஆகும்

அவனே இறையென மாலுற்ற வாறே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



 3040

 உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்

விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்

மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்

கண்ணின்று இலங்கும் கருத்தவன் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



 3041

 எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்

பண்ணும் திறனும் படைத்த பரமனைக்

கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது

உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3042  

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்

உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்

கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே

திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3043

  பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்

செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3044

 அதுஅறி வானவன் ஆதிப் புராணன்

எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்

பொதுஅது வான புவனங்கள் எட்டும்

இதுஅறி வான்நந்தி எங்கள் பிரானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3045  

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்

தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்

பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை

ஊரும் சகலன் உலப்பிலி தானே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  3046

  மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்

மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.  

Comments