திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 4 பாயிரம் 1. கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 4
பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருள் ஆனவன். வானுலகத்துக்கு வித்துப் போன்றவன். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். இத்தகு இயல்பு வாய்ந்த இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கித் துதித்து மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கப் பெற்றேன்.
Comments
Post a Comment