திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 451 to 491 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 14 கர்ப்பக் கிரியை [ கரு உருவாக்குதல் ]

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   451 to 491

  thirumoolar thirumandhiram 

shiva vishnu tv

                                                         

இரண்டாம் தந்திரம் 

14 கர்ப்பக் கிரியை [ கரு உருவாக்குதல் ]


451

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்

சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்

ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்

தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  452

  அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்

செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்

பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்

பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  453

இன்புறு காலத் திருவர்முன் பூறிய

துன்புறு பாசத் துயர்மனை வானுளன்

பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்

அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

   454

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்

புருடன் உடலில் பொருந்துமற் றோரார்

திருவின் கருக்குழி தேடிப் புகுந்த

துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  455

  விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்

பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்

ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

456

  பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்

தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்

மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்

கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  457

  போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்1

நாகமும் எட்டுடன் நாலு புரவியும்

பாகன் விடானெனிற்2 பன்றியு மாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

458

 ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்

மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்1

நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்

பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 459

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்

பாயுங் கருவும் உருவா மெனப்பல

காயங் கலந்தது காணப் பதிந்தபின்

மாயங் கலந்த மனோலய மானதே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

460

   கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட

நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ

வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்

சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

461

 என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்

செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து

இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்

நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

462

 பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்

இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து

குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்

விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

463

    ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே

வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்

பழிபல செய்கின்ற பாசக் கருவைச்

சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

464

    சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்

புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்

அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

465

   போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்

கோசத்துள்1 ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்

ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து

மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

466

 பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்

பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது

அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை

அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

467

   இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்

துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி

நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி

உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

468

   இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்

துன்பக் கலசம் அணைவான் ஒருவனே

ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு

வெந்தது சூளை விளைந்தது தானே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

469

  அறியீ ருடம்பினி லாகிய வாறும்

பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்

செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட

தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

470

   உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்

மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்

திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்

கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

471

  கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்

மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்

கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு

நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 472 

  பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்

காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்

நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்

பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


473 

  எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்

கட்டிய மூன்று கரணமு மாய்விடும்

ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை

கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 



 474

  கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்

பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட

எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை

மண்முத லாக வகுத்துவைத் தானே. 


 475  

அருளல்ல தில்லை அரனவன் அன்றி

அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்

தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்

வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே. 


 476

  வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்

தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்

பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்

வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.  


477

  மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்1

காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை

பூண்பது மாதா பிதாவழி போலவே

ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.


478

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்

பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்

தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்

பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.


479

   பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. 



 480 

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்

பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்

பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்

பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப்பார்க்கிலே. 


 

481

 மாதா உதரம் மலமிகில் மந்தனாம்

மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.


482 

   குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்

குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே. 


 

483

  கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்1

கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்

கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்

கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.


484

  கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்

தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்

பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்

போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.


 485

   உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்

பருவம தாகவே பாரினில் வந்திடும்

மருவி வளர்ந்திடு மாயையி னாலே

அருவம தாவதிங் காரறி வாரே. 


 486

  இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்

தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்

பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்

கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே. 



  487

 இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்1

துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்

முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய

தொன்புற நாடிநின் றோதலு மாமே.


488

  குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே. 


489

   முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்

அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்

அதற்கது வாயின்ப மாவதுபோல

அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. 


490

   ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை

ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியுந் தவத்தினி னுள்ளே.


  491

 பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்

உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்

திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்

திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 

Comments