திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 5 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 5 

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM 

SHIVA VISHNU TV 



சிவனொடக் குந்தெய்வம் தேடினும் இல்லை; 
அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை;
 புவனங் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
 தவனச் சடைமுடித் தாமரை யானே!


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

சிவபெருமானைவிடச் சிறப்பான தெய்வம் உலகில் எங்குத் தேடினும் இல்லை. இனி அப்பெருமானுக்கு உவமையாய்க் கூறத் தக்கவர் எவரும் இல்லை. அப்பெருமான் அண்டத்தைக் கடந்து நின்று பொன் போல் ஒளிர்ந்து விளங்குபவன். செந்நிறமான மேல்நோக்கிய சகசிரதளத் தாமரையில் விளங்குபவன்.

Comments