திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 515 to 519 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 19. திருக்கோயிலிழிவு

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   515 to 519

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv




   இரண்டாம் தந்திரம் 

    19.திருக்கோயிலிழிவு 


515

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்

ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்

சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்

காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 516

  கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை

முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்

வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 517

  ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

518

  முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரி1 வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

519

  பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே

சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. 

Comments