திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 6 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 6
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
சிவபெருமானைவிட மேன்மையுடைய தேவர் எவரும் இல்லை. அவனையன்றிச் செய்கின்ற அரிய தவமும் இல்லை. அவனையே அல்லாது நான்முகன், திருமால், உருத்திரன் என்னும் மூவராலும் அடைவது எதுவும் இல்லை. அவனையல்லாது முத்தி அடைவதற்குரிய வழியை யான் அறியேன்.
Comments
Post a Comment