திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2847 to 2852 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 13. ஊழ்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2847  to 2852

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 13. ஊழ்  


2847

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென்

மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்

வித்தக நந்தி விதிவழி யல்லது

தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2848

   தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்

வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை

கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று

நான்முன்னம் செய்ததே நன்னில மானதே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2849

  ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே

கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை

நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்

பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2850

   வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென்

கான்நின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்

தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்

நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2851

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்

கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்

ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2852

  கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்

நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை

வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்

பாடது நந்தி பரிசறி வார்க்கே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments